வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

திங்கள், 29 டிசம்பர், 2014

வெள்ளையர் ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கா பாரத ரத்னா விருது?





இது சர்வதேச நிதிமூலதனம் கோலோச்சும் காலம். உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உலக முதலாளித்துவம் முயற்சி செய்கிறது. நெருக்கடி காரணத்தால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

கூலி வெட்டப்படுகிறது. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இருக்கும் உரிமையைப் பாதுகாக்கும் போராட்டம் நவீனதாரளமயத்திற்கெதிரான போராட்டமாக மாற வேண்டும். இது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக உருப்பெற வேண்டும்.

மதவெறி மனிதகுலத்தின் எதிரி

சமீபத்தில் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பள்ளிக்குழந்தைகள் 160 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எந்த மதத்தின் பின்னணியில் வந்தாலும் மதவாதத்தை, மதவெறி பயங்கரவாதத்தை நிராகரிக்க வேண்டும். தலிபான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கும், சவூதி அரேபியாவின் பங்கும் உள்ளது.

மதவெறி என்பது மனிதகுலத்தின் எதிரி. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கடந்த காங்கிரஸ் அரசும், இன்றைய பாஜக அரசும் தயாரில்லை. ஏனெனில். இஸ்ரேலுக்கு குடைபிடிக்கும் நாடாக அமெரிக்கா இருப்பதே இதற்குக் காரணமாகும்.

காட்டிக்கொடுத்தவர்களா தேசபக்தர்கள்?

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியரான நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். 4 மாநிலங்களில் முதல்வர்களாகவும், இந்திய கேபினட்டில் அமைச்சர்களாகவும் ஆர்எஸ்எஸ்காரர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய நாடாளுமன்ற மேடையில் நின்றுகொண்டு, இந்துத்துவா எங்கள் குடும்பம் என வெங்கையா நாயுடு சொல்லும் அளவிற்கு தைரியம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சி கைக்கு வந்த இறுமாப்பில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்குகிறார்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பார்வை யாளராக இருந்ததையும், போராட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று பிரிட்டிஷ் அரசுக்கு வாஜ்பாய் பட்டியல் தந்ததையும் பிரண்ட்லைன் ஏடு வெளிப்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பிதாமகன் எனக் கூறப்படும் கோல்வால்கர் அந்தமான் சிறையில் வாடிய தாக கூறுகிறார்கள்.

பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு இந்தியா இளைஞர்களை நல்வழிப்படுத்துவேன் என்று கடிதம் எழுதியவர்தானே இந்த கோல்வால்கர்? பகத்சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்றுஅவரது தந்தை எழுதிய கடிதத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்தானே கோல்வால்கர்?வரலாற்றின் எந்த இடத்திலும் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையோ, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையோ எதிர்க்கவில்லை.

சம்பளம் கேட்காதே என்று சொல்வதுதானே கீதை?

இந்தியாவிற்கு ஜனவரி மாதம் ஒபாமா வருவதற்காக சிவப்புக் கம்பள வரவேற்பளிக்க இன்சூரன்ஸ் துறையைச் சீர்குலைக்கும் அவசரச்சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றம் நடந்து முடிந்த அடுத்த நாள் இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே படுகொலை செய்திருக்கிறார்கள். பகவத்கீதையை இந்தியாவின் பொதுநூலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடமையைச்செய்; பலனை எதிர்பாரதே எனக்கூறும் கீதையின் உபதேசத்தை அதானியிடமோ, டாடா, பிர்லாவிடமோ மோடி சொல்ல முடியுமா? சம்பளம், போனஸ், குறைந்தபட்ச கூலி ஆகியவற்றைக் கேட்காதே என்பது தான் கீதை சொல்வது. நமது வாழ்வுரிமை மீது தாக்குதலை நடத்தும் பாஜகவின் மதவெறிக்கு எதிராக அனைத்து இடதுசாரி சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும், அறிவுஜீவிகளையும் ஒன்றிணைப்போம்.

- உ.வாசுகி(
சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட மாநாட்டைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையிலிருந்து)

நன்றீ
தீக்கதிர்

சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது




சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

மதுரை, டிச.28 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட்ட 21- வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் தொடங்கியது. தியாகிகள் நினைவு ஜோதி, கொடி பெறும் நிகழ்ச்சி பேண்ட் வாத்திய முழக்கத்தின் மத்தியில் எழுச்சிகரமாக நடைபெற்றது. பி.எம்.குமார்,வி.பால கிருஷ்ணன் நினைவுக்கொடியை பயணக்குழுவிடமிருந்து மாவட்டசெயற்குழு உறுப்பினர் இ.எம். ஜோசப், மதுரை தியாகிகள் நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.செல்லம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
செம்படை அணிவகுப்பு
21- வது மாநாட்டைக் குறிக்கும் வகையில் 21 பேர் செங்கொடிகளை ஏந்தி நிற்க, செம்படை அணிவகுப் புக்கு மத்தியில் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் என்.நன் மாறன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். ‘மக்கள் ஜனநாயப்புரட்சி ஓங்குக’ என்ற முழக்கத்துடனும், ‘சோசலிசத்திற்கே எதிர்காலம்‘ என்ற முழக்கங்களுக்கு மத்தியில் தியாகிகள் ஸ்தூபிக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாநாட்டிற்கு கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.தேவி, பி.கோபிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.லெனின் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.மாரிசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றினார்.

பிரதிநிதிகள் மாநாடு 

இதனைத் தொடர்ந்து பிரதிநிதி கள் மாநாடு தொடங்கியது. மாவட்டச் செயலாளர் பா.விக்ரமன் வேலை அறிக்கையையும், வரவு- செலவு அறிக்கையை பா.மாரிசாமியும் சமர்ப்பித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வாழ்த்துரை வழங்கினார்.மாநாட்டில் மாநில செயற் குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ட ராமன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து திங்களன்றும் நடைபெறுகிறது.

நா.திருமலைக்கு பாராட்டு
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு அலுவலகத்தில் சிங்காரவேலர் நூலகம் 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் நூலக ராக நா.திருமலை பணியாற்றி வருகிறார். மாநாட்டில் அவரை மாநிலசெயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் பாராட்டி கதராடை அணிவித்து கௌரவித் தா

திங்கள், 22 டிசம்பர், 2014




















சிபிஎம் திருப்பூர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

திருப்பூர், டிச.21-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாடு ஞாயிறன்று ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங் கியது.முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடி, கொடிமரம், தியாகிகள் நினைவு ஜோதிகளை ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் உள்ள வி.பி.சிந்தன் நினைவகம் முன்பிருந்து கொடி யம்பாளையத்தில் தோழர் என். ஆறுமுகம் நினைவரங்கத்திற்கு செந்தொண்டர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
வழியில் பட்டாசுகள் வெடித்து, தாரை தப்பட்டை முழக்கத்துடன் இந்த ஊர்வலம் உற்சாகமாகச் சென்றது.மாநாட்டு வளாகத்தில் தோழர் எஸ்.பி.கந்தசாமி நினைவு கொடிமரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்து சாமியும், உடுமலை உஸ்மான் நினைவு செங் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியமும், தியாகி கே.ரத்தினசாமி நினைவு ஜோதியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தியும், தியாகி ஆஷர் மில் பழனிசாமி நினைவு ஜோதியை கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமியும், தோழர் சீராணம்பாளையம் தியாகி பழனிச்சாமி நினைவு ஜோதியை மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரியும், தியாகி பன்னீர்செல்வம் நினைவு கொடிக் கயிற்றை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணனும் உணர்ச்சிகரமான முழக்கங்களுக்கு இடையே பெற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன் அங்கு கூடியிருந்த கட்சி அணியினரின் கம்பீர மான உணர்ச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே செங்கொடியை ஏற்றி வைத்தார்.தியாகிகள் நினைவு தூணுக்கு தலைவர்கள் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்திய பிறகு மாநாடு தொடங்கியது. எம்.ராஜகோபால், வெ.ரங்கநாதன், லட்சுமி, டி.குமார் ஆகியோர் மாநாட்டு தலைமைக்குழுவாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக்குழுத் தலைவர் செ.நடேசன் அனைவரையும் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ. மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்டக்குழுச் செயலா ளர் கே.காமராஜ் அரசியல் ஸ்தாபன வேலையறிக்கையை முன்மொழிந்தார். இம் மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.திங்களன்று பிரதிநிதிகள் விவாதம் நடைபெறுகிறது. செவ்வாயன்று மாநாட்டின் நிறைவாக ஊத்துக்குளியில் பிரம்மாண்டமான பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந் தரராசன் எம்.எல்.ஏ., உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., உள்பட மாவட்ட தலைவர்கள் உரையாற்று கின்றனர்.

வியாழன், 18 டிசம்பர், 2014






திருச்சி பொன்மலை சங்கத்திடலில் தோழர் பாப்பா உமாநாத் நினைவிடத்தில் உ.வாசுகி, எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


திருச்சி, டிச.17

தோழர் பாப்பா உமாநாத்தின் நினைவுதினத்தையொட்டி திருச்சி பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், கே.சி.பாண்டியன், அண்ணாதுரை, வி.வி.கிருஷ்ணமூர்த்தி, பகுதிசெயலாளர்கள் ஜெயபால்,கார்த்திகேயன், பழனியப்பன், வேளாங்கண்ணி ஆகியோர் மலர் வளையம் வைத்துமரியாதை செலுத்தினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் பணியாற்றிய, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு அடித்தளமிட்டு அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டதோழர் பாப்பா உமாநாத்தின் நினைவு தினம் புதனன்று திருச்சியில் அனுசரிக்கப்பட்டது.
ஜனநாயக மாதர் சங்கம்சார்பில் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி, மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலச் செயலாளர்சுகந்தி, மாநில பொருளாளர் மல்லிகா, மாநிலநிர்வாகிகள் பொன்னுத்தாய், ஜோதிலெட்சுமி, பிரமிளா, மாலா, மாவட்ட செயலாளர் ரேணுகா, மாநகர செயலாளர் ரேணுகா மற்றும் நிர்வாகிகள் சித்ரா, புவனேஸ்வரி, ராணி, பாலாமணி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சிஐடியு மாநிலக்குழு சார்பில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், மாநில துணைப் பொதுச்செயலாளர் கருமலையான், மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டத் தலைவர் சம்பத்,பெல் சிஐடியு சங்க அருணன்,சம்பத், இமானுவேல் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலைபகுதிக்குழு சார்பில் உறுப்பினர்கள் சீனிவாசன், முத்துகுமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கிழக்கு பகுதிக்குழு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் சிபிஎம்- சிஐடியு - மாதர் சங்கம் மரியாதை

மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவராகவும், பெண்ணுரிமை போராளியாகவும் செயல்பட்டு மறைந்த தோழர் பாப்பா உமாநாத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காட்டூரிலுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டதலைவர் அமுதா, மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, எஸ்.புனிதா,ராஜலட்சுமி, ஜோதிமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதன், 17 டிசம்பர், 2014

பெண்ணுரிமை போராளி






மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக, மாநிலக்குழு உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றிய தோழர் பாப்பாஉமாநாத் புரட்சிகர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.1945ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்பாப்பா உறுப்பினரானார். 1946ம் ஆண்டு பொன்மலை சங்கத்திடலில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடும், அடக்குமுறைகளும் தோழர் பாப்பாவுக்கு உறுதியான படிப்பினைகளை அளித்தன.
1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. தோழர் பாப்பாவும் அவரது அன்னை லட்சுமியும் கட்சியின்தலைமறைவு செயலகத்தில் பணிபுரிய சென்னைக்கு அனுப்பப்பட்டனர். தோழர் பாப்பாவும் அன்னை லட்சுமியும் மற்ற தலைவர்களுடன் கைது செய்யப்பட்டு, கடும் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.சிறைக்குள் நடந்த கொடிய தாக்குதலை கண்டித்து தோழர்கள் ஆர். உமாநாத், எம். கல்யாணசுந்தரம், ஆளவந்தார், அன்னை லட்சுமி, சிவகிரி பாண்டியன், பாப்பாஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். உறுதி குலையாது உண்ணாவிரதம் இருந்த 23 வது நாள் அன்னை லட்சுமி வீரமரணம் அடைந்தார். இறந்த நிலையில் கூட தோழர் பாப்பாவுக்கு பெற்ற அன்னையை பார்க்க அரக்கத்தனமான சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த பின் தோழர் பாப்பா தொடர்ந்து கட்சிப் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். நீண்ட சிறை வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்வுக்கும் சொந்தக்காரராக விளங்கியதோழர் உமாநாத்தை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தில் தந்தை பெரியார் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.ஜனநாயக மாதர் சங்கத்திற்கு அடித்தளமிட்டு அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் தோழர் பாப்பா உமாநாத். தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும், கட்சியின் கிளர்ச்சி பிரச்சாரப் பணிகளிலும் நீண்டகாலம் சேவை புரிந்து பெருமை சேர்த்தவர். திருவெறும்பூர்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய போது பெண்களின் பிரச்சனைகளை விடாப்பிடியாக வலியுறுத்தினார். தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் வீரம்செறிந்தவாழ்க்கை மாதர் இயக்கத்திலும், கட்சிப்பணிகளிலும்ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கும்.
நன்றி தீக்கதிர்

வியாழன், 11 டிசம்பர், 2014

பாரதி எந்நாளும் நீ புதிது


இன்று பாரதி பிறந்தநாள்

 

விடுதலை பாடிய வீரக்கனல்
சமத்துவ சமுதாயம் படைக்கச்
சமர்புரிந்த சிந்தனைச் சிற்பி.
உலகுக்கு ஒளியூட்டும் புதிய இந்தியா
உன்னத வாழ்வளிக்கும்
மண்சொர்க்கம்
காண விழைந்திட்ட கவியோகி
மூட நம்பிக்கையின் முழுப்பகையாளி
தன்னம்பிக்கையின் தழல் ஒளி
அறிவில் பரந்த அகண்ட வெளி
அன்பில் விரிந்த பார்வை விழி
விஞ்ஞான வெளிச்சத்தின் ஒளிக்கீற்று
பெண்கல்வி, பெண் விடுதலை பேசிய
பெருந்தகை.
தமிழன் எனும் மரபில் கால்
ஊன்றிமானுட சமுத்திரமாய் விரிந்து
பரந்தவன்மதவெறி அண்டா மனித நேயன்
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுதுக்கும் பொதுவுடைமை
ஒப்பில்லாத சமுதாயம் உலகுக்கு
ஒரு புதுமை என்ற ஞானி
சொல்லில் புதிது கவியில் புதிது
மனதில் புதிது மனிதனில் புதிது
வாழ்வில் புதிது வழிகாட்டலில் புதிது
புதிது புதிது புதிதாய் வாழ்ந்த
பாரதி நீயும் எந்நாளும் புதிது

நன்றீ
தீக்கதிர்
மாதர் சங்கம் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம்



கோவை, டிச. 10- –
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம் கோவையில் செவ்வாயன்று நடைபெற்றது. டிசம்பர் 10ம் தேதியன்று மனித உரிமை நாளாக உலகம்முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் மீது தொடர்ந்து நடைபெறும் அத்துமீறல் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற முழக்கங்களை முன்வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நாடு முழுவதும் மனித உரிமை நாள் கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக கோவைப்புதூரில் உள்ள சி.பி.முத்துசாமி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனித உரிமை நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தீபக்சந்திரகாந்த் தலைமை வகித்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.அமுதா, மாணவர் சங்கத்தின் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். “பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள்” என்கிற தலைப்பில் மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.புனிதா, எ.ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிறைவாக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சி.ஜோதிமணி நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

நன்றீ
தீக்கதிர்

செவ்வாய், 9 டிசம்பர், 2014

”என் வாழ்க்கை, என் உரிமை” -- > தீக்கதிர் கட்டுரை <--- (கட்டுரையாளர் உ.வாசுகி)




டிசம்பர் 10 மனித உரிமை தினம். பல்வேறு துறைகளில் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கங்களும், ஆர்வலர்களும் பல முழக்கங்களை முன்னெடுக்கும் நாள். பெண்களின் உரிமை குறித்தும் விவாதங்களும், கருத்துக்களும் இந்நாளில் முன்வைக்கப்படுகின்றன. காலம் மாறியிருக்கிறது, காட்சிகள் மாறியிருக்கின்றன, பல தடைகள் கடக்கப்பட்டு, பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அதேசமயம் இன்னும் நீடிக்கும் முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில், உலகமயம் கோலோச்சும் சூழலில் ஏற்பட்டிருக்கும் பின் னடைவுகள் பரிசீலிக்கப்பட்டு, இலக்குகள் புதுப்பிக்கப்பட வேண்டும். போராட்டங்கள் வலுவடைய வேண்டும்.

அண்மைக்கால நிகழ்வுகளைப் பரிசீலித் தால் பொது வெளியில் பெண்களின் பங்களிப்பு உயர்ந்திருப்பது தெரியும். ஜனநாயக வெளிச்சம் படாமல் இருந்த எகிப்து, துனீசியா உள்ளிட்ட அரபு நாடுகளில் நிகழ்ந்த அரபு வசந்தம் என்ற போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு பேசப்படும் விதத்தில் இருந்தது. நாங்கள் 99 சதவீதம் என்ற குரல் தெறித்த வால் ஸ்ட்ரீட் போராட்டத்திலும் பெண்கள் பங்கு வலுவாக இருந்தது. இடதுசாரி கண்ணோட்டத்துடன் கூடிய அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட லத்தீன்அமெரிக்க நாடுகளில், அதற்கான தேர்தல் போராட்டக் களத்தில் பெண்களின் திட்ட வட்டமான ஆதரவு இருந்தது.
சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து ஐரோப்பிய நாடு களில் நடக்கும் மகத்தான வேலை நிறுத்தப் போராட்டங்களில் பெண் தொழிலாளிகளை முன் வரிசையில் பார்க்க முடிகிறது. கல்விக் கான போராட்டத்தில் பாகிஸ்தானில் மலாலா போன்றவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. ஆப்கானிஸ்தானத்திலும் தலிபான்களின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் பெண்கள் பேசத் துவங்கியுள்ளனர்.
தொடரும் பாகுபாடுகள்
இருப்பினும் ஒரு பக்கம் பாகுபாடுகள் தொடர்கின்றன. இரானில், பெண்கள் விளை யாட்டு நிகழ்வுகளுக்குப் பார்வையாளர்களாக வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து, ஆண்களின் வாலிபால் போட்டியைப் பார்க்க வந்த ஒரு குழுவில் இருந்ததற்காக, கோன்ச்செ கவாமி என்ற பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். தற்போது உடல்நலக் குறைவின் காரணமாகப் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்.
அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று உலக அளவில் ஆதரவுக் குரல்கள் ஒலிக்கின்றன. அதே இரானில், 2007ல் தன்னைப் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தவரைத் தற்காப்புக்காகக் கொலை செய்த 19 வயது ரெஹானே ஜபாரி என்ற பெண் அண்மையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.இந்தியாவில் பெண்கள் இயக்கத்தின் வரலாறு நீண்டது; உயரிய பங்களிப்பை உள்ளடக்கியது. தேச விடுதலை போராட் டத்தில், தொழிலாளி விவசாயி இயக்கங்களில், சிவில் உரிமைக்கான போராட்டங்களில், பெண்ணுரிமைக்கான குரல் எடுப்பில் கணிசமாகப் பெண்களைக் காண்கிறோம். நிவாரணங்கள் கிடைக்கின்றன. இருப்பினும் பிரச்சனைகள் தொடர்கின்றன. மொத்தத்தில் இன்றும் பெண் சமமாக மதிக்கப்படுவதில்லை.
சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் இக்கருத்தியலுக்கும், அது சார்ந்த நடைமுறைக்கும் பின் உள்ளன. பெண் முழுமை யான மனிதராகக் கருதப்படாததால், அவ ளுக்கு சம அந்தஸ்தும், சுயேச்சையான செயல்பாடும் மறுக்கப்படுகிறது. யாருடைய கட்டுப் பாட்டுக்குள்ளேயோதான் நிரந்தரமாக வசிக்க வேண்டியிருக்கிறது. மநு கூறிய பெண்ணடிமைத்தனம் இன்று வரை புதுப்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.
சம கூலி இன்மை அல்லது பெண்ணின் பணிக்குக் குறைந்த ஊதியத்தை நிர்ணயம் செய்வது போன்றவை எல்லாமே ஒரு புறம் பாலினப் பாகுபாடாகவும், மறுபுறம் வர்க்க சுரண்டலாகவும் நிலவுகின்றன. கருணை நியமனத்தில் திருமணமான மகளுக்கு வேலை மறுக்கப்படுகிறது. ஆனால் மகனுக்குத் திருமணம் தடையாக இல்லை.
கைகள் போதுமே?
பெண் தான் வீட்டுப் பணிகள் செய்ய வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது. இது குறித்துக் கமலா பாசின் மிக அழகாகக் கூறுகிறார் “கருவைச் சுமக்க கருப்பை வேண்டும். அது பெண்ணிடம் மட்டுமே உள்ளது. அதை ஆண் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் வீட்டுப் பணிகளைச் செய்ய கருப்பை தேவையில்லை, கைகள் போதும், கைகள் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாமே? அது ஏன் பெண்ணின் மீது மட்டும் சுமத்தப்படுகிறது? இதில் தான் பாலின பாகுபாடு தெரிகிறது”. அவ்வாறு பெண் செய்கிற வீட்டுப் பணிக்கும் உரிய சமூக அந்தஸ்து கிடைப்பதில்லை.
பெண் இவ்வாறு கட்டிப்போடப்படுவது சமூக, பொருளாதார தளங்களில் அவளுக்கான சம வாய்ப்புகளை முடக்குகிறது. சின்ன சின்ன உரிமைகள் கூட சுலபமாகவோ இயல்பாகவோ கிடைத்துவிடுவது கிடையாது. என்ன படிக்க வேண்டும் என்பது பெண்ணின் விருப்பத்திற்கு விடப்படுவதில்லை. பெண்ணின் படிப்பு திருமணச் சந்தைக்கு உதவுமா என்றுதான் பார்க்கப்படுகிறது.என்ன உடை அணிவது என்பதையும் அவள் தீர்மானிக்க முடியாது.
ஆணை வசீகரிக் கும் விதத்தில் உடை அணியக் கூடாது என்பதே போதிக்கப்படுகிறது. பரஸ்பரம் ஈர்ப்புஎன்பது மனித இயலின் அம்சம். நாகரிக மதிப் பீடுகளுக்கு உட்பட்டு அதை வெளிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வன்முறைக்குக் காரணம் பெண்ணின் உடை என்பது பலமட்டக் கருத்துக்களாக முன் வைக்கப்படுகிறது. இது பாலியல் குற்றங்களைக் குறைத்து மதிப்பிட வைக்கிறது. குற்றவாளி தப்பிக்க வழி வகுக்கிறது.
துணைக் கோளா?
குடும்பப் பொறுப்புகள், குழந்தை வளர்ப்புபோன்றவை பெண்ணுக்கு மட்டும் உரியகடமைகளாகக் கருதப்படுவதால், வேலைக்குப் போவதா வேண்டாமா, என்ன வேலைக் குப் போவது என்று முடிவெடுப்பதும் அவள்கையில் இல்லை. சமீபத்தில் ஒரு பிரபல மான கவிஞர் ஒரு கூட்டத்தில் பேசும் போது,ஒரு குடும்பம் பெண்ணை இழந்தால் பண் பாட்டை இழக்கிறது, ஆணை இழந்தால் பொருளாதாரத்தை இழக்கிறது என்று பேசி யிருக்கிறார்.
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சொன்னது போல், பெண் துணைக்கோளாகவே பார்க்கப்படுகிறாள்.யாருடன் நட்பு பாராட்டுவது, யாரை வாழ்க்கை துணையாகத் தேர்வு செய்வது என்பதற்கான கதவும் பெண் என்றால் மூடப்படுகிறது. சாதி தூய்மை, மதம் போன்ற தடைகள் அந்த உரிமையை முடக்குகின்றன. கௌரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. ஆண்-பெண் என்றாலே அது கணவன் மனைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வன்முறையை ஏவும் ஸ்ரீராம் சேனாவின் அட்டூழியங்களைப் பார்க்கிறோம். பொது இடம் என்று அழைக்கப்படும் கடற்கரை, ஹோட்டல், சினிமா தியேட்டர் போன்றவற்றுக்கு ஓர் ஆண் தனியாகப் போவதில் பிரச்சனையே இல்லை. ஆனால் பெண் தனியாகப் போனால், அதுதான் பிரச்சனையே.கருவறையிலிருந்து கல்லறை வரை பெண்ணுக்கு அவள் வாழ்க்கையைத் தேர்வுசெய்வது அவள் கையில் இல்லை.
எப்படி வாழ்வது, யாருடன் வாழ்வது, எங்கு போவது, யாருடன் போவது, என்ன படிப்பது, என்ன உடுத்துவது என்று முடிவெடுப்பதற்கான சுதந் திரம் 21ம் நூற்றாண்டிலும் மறுக்கப்படுகிறது. இது மாற்றப்பட வேண்டும்.
சுவாசிக்க வழி மறுக்கும் பண்பாட்டுச் சூழல்
எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தாற் போல, பெண்ணடிமைத்தன பண்பாட்டுச் சூழல் ஆர்.எஸ்.எஸ் வழி நடத்தும் பிஜேபி அரசால் நியாயப்படுத்தப்படுகிறது. வட மாநிலங்களில் அவர்களால் முன் வைக்கப்படும் லவ் ஜிஹாத்இவ்வகையைச் சேர்ந்ததுதான். சாதி பஞ்சாயத்துக்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது சங் பரிவாரத்தால் பயன்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் பாமக, கொங்கு அமைப்புகள் சாதிய படிநிலையைப் பாதுகாக்க, லவ் ஜிஹாத்தை நடத்திக் கொண்டிருக் கின்றன. பெண்ணின் திருமண வயது இதற்காக உயர்த்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றன.
கொங்கு அமைப்பின் மாநாடு ஒன்றில், பெண் கம்ப்யூட்டர் படிக்கக் கூடாது, கம்ப்யூட்டர் படித்த பெண்ணை யாரும் திரு மணம் செய்து கொள்ளக் கூடாது என்று பேசப் பட்ட கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் இக் காலத்தில் முன்னுக்கு வந்தது. பெண்ணின் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலத்துக்குப் பின்னால் சாதிய, மதவாத, ஆணாதிக்க நிகழ்ச்சி நிரலே பளிச்சென்று தெரிகிறது.இத்தகைய மூச்சு திணற வைக்கும் பண் பாட்டுச் சூழலை நிராகரித்து, என் வாழ்க்கை என் உரிமை என்று சுதந்திரமாய் உரத்து சொல்லபெண்கள் முன்வர வேண்டும், அதற்கான சமூகச் சூழலை உருவாக்க முற்போக்காளர்கள் முயற்சிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து, நாடெங்கிலும் டிசம்பர் 10 மனிதஉரிமை தினத்தை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கடைப்பிடிக்கிறது.
குறிப்பாகக் கௌரவக் கொலைகளைத் தடுத்துநிறுத்த தனி சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் இப்பிரச்சாரத்தைக் கல்லூரி களுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிடப் பட்டிருக்கிறது.“கைகள் உயரட்டும் தலைகள் நிமிரட்டும்வானத்தில் ஒரு பாதி அங்கே அமரட்டும்”- சொல்லாத சேதிகள்

நன்றி 
தீக்கதிர்

திங்கள், 8 டிசம்பர், 2014

மோடி அரசாங்கத்தின் ஆறு மாதங்கள “ பிரகாஷ் காரத் “


பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின்ஆறு மாத கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள் மற்றும் இந்துத்துவா சக்திகளின் தாக்குதல்கள் ஆகிய இரண்டையுமே பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடித்தாக வேண்டும். இதற்கு ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மோடி அரசாங்கத் தின் ஆறு மாதங்கள் குறித்து, “முடக்குவளைவில் திரும்பிவிட்ட அரசாங் கம்’’என்னும் பெயரில் ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டிருக்கிறது. சாராம்சத்தில் பல்வேறு கொள்கைப் பிரச்ச னைகளில் பாஜக அரசாங்கத்தின் நிலை பாடு தலைகீழாக மாறிவிட்டது என்று அந்தப் பிரசுரத்தில் கூறப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, பாஜகவானது ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகள் பலவற்றை எதிர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது, அரசாங்கத்திற்கு வந்த கடந்த ஆறு மாதங்களில் தன்னை முற்றிலுமாக மாற்றியமைத்துக் கொண்டு, முந்தையஅரசாங்கம் பின்பற்றிய அதே கொள்கை களைப் பின்பற்றத் தீர்மானித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டில் ஏராளமான உண்மைகள் இருக்கின்றன. அடிப்படையாக, பாஜகவும் எங்களைப் போன்ற ஒரு கட்சிதான் என்று காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாத ஆட்சிக் காலத்தில் மோடி அரசாங்கமும் ஐமுகூ அரசாங்கம் பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றியது என்பதைக் காட்டி இருக்கிறது. இதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன. முந்தைய ஐமுகூ அரசாங்கம் செய்ததுபோலவே, பாஜக அரசாங்கமும் இன்சூரன்ஸ் துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட் டுக்கு உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் செய்தது போலவே பொதுத் துறை நிறுவனங்களை மிகப்பெரிய அள வில் தனியாருக்குத் தாரை வார்க்க பாஜக தீர்மானித்திருக்கிறது. டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக இருந்துவந்த கட்டுப்பாட்டை முந்தைய அரசாங்கம் ஒரு பகுதி நீக்கி இருந்தது. இப்போதைய பாஜக அரசாங்கமும் டீசல் விலை நிர்ணயம் தொடர்பான கட்டுப்பாட்டை நீக்கி இருக்கிறது. ரயில் கட்டணத்தை உயர்த்தஐமுகூ அரசாங்கம் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பாஜக அரசாங் கம் உயர்த்திவிட்டது. ஐமுகூ அரசாங்கம் கொண்டுவந்த ஆதார் திட்டத்தையும், நேரடி ரொக்கத் திட்டத்தையும் பாஜக அர சாங்கம் பின்பற்றத் தொடங்கிவிட்டது.பட்டியலுக்கு முடிவே இல்லை. இவற்றில் சில சமாச்சாரங்களில் எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது பாஜக எதிர்த் தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, அதே கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒரே வர்க்க நலன்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்கிற அடிப்படை உண்மையை இது அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. பெரு முதலாளிகளைத் துதிபாடி அண்டிப் பிழைக்கும் குணத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகவும் பிரியமான முதலாளியாக முகேஷ்அம்பானி இருந்தார். இவரைக் குஷிப் படுத்த வேண்டும் என்பதற்காகவும், இவரது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே பெட் ரோலியத் துறை அமைச்சர் இருமுறை மாற்றப்பட்டார். நரேந்திர மோடியைப் பொறுத்தவரை, அவருக்கு மிகவும் பிரியமானவர் கவுதம் அதானி. அவரது சொத்துக்கள் கடந்த ஆறு மாதங்களில் பல்கிப்பெருகிவிட்டன. அதானியின் கம்பெனிகளில் ஒன்று, பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ஒரு பில்லியன் டாலர் (சுமார் 6,200 கோடி ரூபாய்) கடன் பெற அரசின்ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்றி லிருந்து அதிகத் தொகைக்குக் கடன் பெறும் கம்பெனி இதுதான். எனவே, சலுகைசார் முதலாளித்துவத்தை (உசடிலே உயயீவையடளைஅ) ஊட்டி வளர்ப்பதைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்காவது சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஏனெனில் அதன்தலைமையிலான ஐமுகூ அரசாங்கத் திற்கு மக்களவையில் பெரும்பான்மை இல்லாமலிருந்தது. வெளியிலிருந்து சில கட்சிகள் ஆதரிக்க வேண்டிய நிலை யிலேயே அது இருந்தது. எனவே, அது உந்தித்தள்ள முயன்ற சில கொள்கைகளை அதனால் தான் விரும்பியவண்ணம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், பாஜக மக்களவையில் வலுவான நிலையில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. எனவே அதே கொள்கைகளை மிகுந்தஉற்சாகத்துடன் இதனால் எடுத்துக் கொள்ள முடியும். எனவே மோடி அரசாங்கத்தின் ஆதரவுடன் வலது சாரித் தாக்குதலை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரயில்வே யில் முதன்முறையாக அந்நிய நேரடிமுதலீடு, தனியார் வர்த்தக நலன் களுக்காக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறந்து விடுவதற்காக நிலக்கரி ஒதுக்கீடு அவசரச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தல் முதலானவை அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில், தொழிலாளர்களுக்கு இருந்து வந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்புகளையும் பறிக்கும் விதத்திலும், கார்ப்பரேட் நலன்களை முன்னெடுத்துச் செல்லும் விதத்திலும் தொழிலாளர்நலச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. “நல்லகாலம் பிறக்குது’’ என்பதனை கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தகநிறுவனங்களுக்கும் உத்தரவாதப் படுத்தும் வண்ணம் மோடி அரசாங்கம் ஏழைகளைக் கசக்கிப் பிழியும் வேலை களில் இறங்கி இருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் பயனாளர்களை வெட்டிச் சுருக்குதல், அச்சட்டத்தின் கீழ் இருந்த வேலை உரிமையையே நீக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதிலிருந்து இவற்றை நன்கு பார்க்க முடியும்.அயல்துறைக் கொள்கையைப் பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களில் பிரதமர் மோடி எண்ணற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இவற்றில், அவருடைய பார்வையில், ஜப்பான் மற்றும் ஆஸ் திரேலியா பயணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். வலதுசாரி மனோபாவம் கொண்ட இவ்விருநாட்டு பிரதமர்களும் மோடியுடன் அரசியல் உறவினைப் பகிர்ந்து கொள்ள முன்வந்திருப்பது தற்செயலான ஒன்று அல்ல. ஜப்பான் சென்றிருந்த சமயத்தில் மோடியும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபெயும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ளவும், ராணுவ உறவு களைப் புதிதாக ஏற்படுத்திக்கொள்ளவும் தீர்மானித்திருக்கிறார்கள். இதில், `மலபார்’ பயிற்சிகள் போன்று இந்திய - அமெரிக்கக் கடற்படை பயிற்சிகளில் ஜப்பான் பங்கேற்பும் இருந்திடும். இந்தியாவும் ஜப்பானும் “2+2’’ முறையில் இருநாடுகளின் அயல்துறை மற்றும் ராணுவ அமைச்சர்கள் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வோராண்டும் சந்திப்பது என்றும் தீர்மானித்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில், மோடியும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட்டும் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின்கீழ், இரு நாடுகளும் ஒவ்வோராண்டும் உச்சி மாநாடுகளை நடத்திடும், ராணுவ அமைச்சர்களின் முறையான கூட்டங்கள் அமைந்திடும் மற்றும் இரு நாடுகளும் கடற்படைப் பயிற்சிகளையும் முறையாக மேற்கொள்ளும். ஆஸ்திரேலிய செய்தித் தாள், தி ஏஜ் இதுதொடர்பாக எழுதியிருப்பதில், “இந்த பாதுகாப்பு ஒத்துழைப் புக் கட்டமைப்பு ஒப்பந்தம், கிட்டத் தட்ட இந்தியா, ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள ராணுவக் கூட்டணிக்கு இணையானது மற்றும் ஆழமானது, இம்மூன்று நாடுகளும் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன’’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வரக்கூடிய சமயத்தில், இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படக்கூடிய சூழ லில், முன்பு உருவாகி இருந்ததைப்போல அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடு களுக்கான கூட்டணி அமைய இருக்கிறது. இதிலும்கூட பாஜக அரசாங்க மானது ஐமுகூ அரசாங்கம் நடைமுறைப் படுத்திய அயல்துறைக் கொள்கையின் சில அம்சங்களைத்தான் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறாக மோடி அரசாங்கம் பொருளாதார மற்றும் அயல்துறைக் கொள்கை களில் ஐமுகூ அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதே சமயத்தில், ஒரு விஷயத்தில் தன்னுடைய சொந்த வித்தியாசமான அணுகு முறையைக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதே அது. கடந்த ஆறு மாதங்களில், மோடி அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-உடன் அர சாங்கத்தின் அணுகுமுறையை இரண்டற இணைப்பதில் தீர்மானகரமானமுறையில் செயல்பட்டதைக் காண முடிந்தது. பொருளாதாரம், கல்வி, சித்தாந்தம், பாதுகாப்பு, சேவை மற்றும் மக்கள் என்னும் ஆறு குழுக்களை ஆர்எஸ்எஸ் அமைத்திருக் கிறது. ஆர்எஸ்எஸ்சின் இந்தஆறு குழுக்களும் பாஜக அரசாங்கத் தின் தங்கள் குழுக்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஏற்கனவே இரண்டறக் கலந்து செயல்படத் துவங்கிவிட்டன, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப அரசாங்கத்தின் கொள்கைகளை வடிவமைக்கும் செயல்களில் இறங்கி விட்டன. கல்வி அமைப்புகளைப் பொறுத்தவரையில், கல்விக் கொள்கைகள், ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கான நிறுவனங்களில் இந்துத்துவவாதிகளை அல்லது குறைந்தபட்சம் அதற்கு ஆதர வாக இருப்பவர்களை நியமிக்கும் வேலைகள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதர இந்திய மொழிகளைக் காவு கொடுத்து சமஸ் கிருதத்தை உந்தித்தள்ளுவதற்கான முயற்சி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் சமூகத்தில் இந்துப் பழமைவாத உலகக் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றன. கிரிராஜ் கிஷோர் மற்றும் நிரஞ்சன் ஜோதி போன்ற மிகவும் வெறிபிடித்த மதவெறி சிந்தனைகளை உள்ளடக்கி யவர்களைக் கொண்டு அமைச்சரவை நிரப்பப் பட்டிருக்கிறது. பிரதமரே ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருப்பதனால், ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய இந்துத்துவா திட்டத்தை அமல்படுத்திட ஆதிக்க நிலைபாட்டை எடுத்திருக்கிறது.கீழ்மட்டத்திலும், இந்துத்துவா அமைப்புகள் பசுவதை, “லவ் ஜிகாத்’’ மற்றும் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆகிய பிரச்சனைகளை சிறுபான்மை யினருக்கு எதிராக பகைமையை உரு வாக்கும் விதத்திலும், மதவெறிப் பதற்ற நிலைமையை அதிகரிக்கக்கூடிய விதத்திலும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. தலைநகர் தில்லி யிலேயே பவானா, திரிலோக்புரி மற்றும் கிழக்கு தில்லியில் ஒரு தேவாலயத்தை எரித்தல் போன்ற மதப் பதற்ற நிலைமை கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாஜக மற்றும் மோடி அரசாங்கத் தின் ஆறு மாத கால ஆட்சியானது, கார்ப்பரேட்டுகளின் நலன்கள் மற்றும்இந்துத்துவா சக்திகளின் தாக்குதல் கள் ஆகிய இரண்டையுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடித்தாக வேண்டும். இதற்குஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தேவைப் படுகிறது.மோடி அரசாங்கத்தின் நவீனதாராளமயக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டம், ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் மற்றும் அதன் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தங்கள்மீது ஏவப்பட்டுள்ள சுமைகளைத் தடுத்து நிறுத்திட, உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவின ரின் ஒன்றுபட்ட போராட்டங்களும் வெகுஜன இயக்கங்களும் வர்க்க மற்றும்வெகுஜன அமைப்புகளால் வளர்த்தெடுக் கப்பட வேண்டும். இடதுசாரி சக்திகள் வலதுசாரிகளின் தாக்குதலை ஒன்று பட்டுநின்று முறியடித்திட வேண்டும். இது மதச்சார்பற்ற ஜ னநாயக சக்திகள் மிகவும் விரிவானமுறையில் அணிதிரள்வதற்கு வழிவகுக்கும். - 

தமிழில்: ச. வீரமணி

நன்றி தீக்கதிர்

புதன், 3 டிசம்பர், 2014

மாற்றுத்திறனாளிகளின் உரிமை காக்க கரம் கோர்ப்போம்!

கோவில் இடிப்புகள்- வரலாற்றுப் பின்னணி என்ன? அ.அன்வர் உசேன் 

 பாபர் மசூதி இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் கடந்துவிட்டன. பாபர் மசூதி இடிப்பு இந்திய மதச்சார்பின்மை மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமிட்ட தாக்குதல் ஆகும். மோடி ஆட்சி அமைந்துள்ள இத்தருணத்தில் வகுப்பு வாத சக்திகள் தம் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளன. “நமது நீண்ட கால கனவை நனவாக்கிட இது பொன்னான வாய்ப்பு” என சங்பரிவார இந்துவகுப்புவாதிகள் பகிரங்கமாக கூறி வருகின்றனர். சங் பரிவாரத்தின் கனவு “இந்து ராஷ்ட்ரம்” என்பதாகும்.சங்பரிவாரத்தின் நச்சுப் பிரச்சாரத்தில் இடிப்புகள் என்பது ஒரு முக்கிய இடம்பிடித்துள்ளது. இசுலாமிய மன்னர் களால் 60,000 கோவில்கள் இடிக்கப் பட்டதாகவும் அதனால் இந்து மதம் அவமானப்பட்டது எனவும் அதற்கு பழி தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் பல்லாண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு என்பது பழிதீர்க்கும் படலத்தின் முதல் படி! இசுலாமியர்களுக்கு எதிராக கருத்து இல்லாத சாதாரண மக்கள் கூட கோவில் இடிப்புகள் குறித்த பிரச்சாரம் உண்மை என்றே நம்புகின்றனர்.இந்திய வரலாற்றில் இசுலாமிய மன்னர்களால் கோவில்கள் இடிக்கப் பட்டனவா? ஆம்! இடிக்கப்பட்டன. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் கோவில் இடிப்புகளை ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள் இதுதொடர்பான வேறு சில கேள்விகளையும் முன் வைக்கின்றனர்.இசுலாமிய மன்னர்கள் மட்டும்தான் கோவில்களை இடித்தனர் அல்லது கொள்ளை அடித்தனரா? இந்து மன்னர் கள் செய்யவில்லையா?கோவில் இடிப்புகள் என்பது மத அடிப்படையில் நடந்த நிகழ்வா அல்லது அதற்கு வேறு காரணம் உண்டா? இந்தியாவில் மட்டுமே இது நடந்ததா? இசுலாமிய மன்னர்கள் கோவில்களை உருவாக்கியது உண்டா? அதே போலஇந்து மன்னர்கள் மசூதிகளை கட்டினரா?இக்கேள்விகளுக்கு கிடைக்கும் பதில் சங்பரிவாரத்தின் பல பொய்களை அம்பலமாக்கிவிடும். கோவில் கொள்ளையும்இந்து மன்னர்களும் கி.பி.642ல் பல்லவ மன்னன் முத லாவது நரசிம்மவர்மன் சாளுக்கியர்களை தோற்கடித்து தலைநகரான வாதாபியில் இருந்த கோவிலில் விநாயகர் சிலையைகொள்ளை அடித்தான். கி.பி. 692ல் வட இந்திய மன்னர்களை தோற்கடித்த சாளுக் கியர்கள் அங்குள்ள கோவில்களிருந்து கங்கை மற்றும் யமுனை விக்கிரகங்களை களவாடி தமது ஆட்சி பகுதிக்கு கொண்டு வந்தனர். வங்காளத்தை ஆண்ட இந்து மன்னனின் படைகள் காஷ்மீர் அரசன் லலிதாத்தியவை தோற்கடித்த பொழுது அந்த அரசனின் குலதெய்வமான விஷ்ணு வைகுந்தாவின் சிலையை அழித்தனர். 9ம் நூற்றாண்டில் சிங்களத் தீவின் மீது படை எடுத்த பாண்டிய மன்னன் சிறீமாற சிறீவல்லபா அனுராதா புரத்தை சூறையாடியது மட்டுமல்ல; சிங் களவர்களின் கடவுளான தங்கத்தாலான புத்தரின் சிலையை கைப்பற்றி தனதுநாட்டிற்கு கொண்டுவந்தான். 50 ஆண்டுகள் கழித்து வேறொரு சிங்கள மன்னவன் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்து பல நகரங்களை சூறையாடி புத்தர் சிலையை மீட்டு சென்றான். பத்தாவது நூற்றாண்டில் கங்கரா அரசன் சாஹியை பிரதிஹாரா அரசன் ஹெராம்பாபல்லா தோற்கடித்த பொழுது தங்கத்தாலான விஷ்ணு வைகுந்த சிலையை கைப்பற்றிச் சென்றான். சில ஆண்டுகளுக்கு பிறகு கெண்டல்லா அரசன் யெசோவர்மன் பிரதிஹாரா அரசனை தோற்கடித்து அதே விஷ்ணு வைகுந்த சிலையை கைப்பற்றி தன் தேசத் திற்கு கொண்டு சென்று கஜூராஹோவில் இருந்த இலட்சுமணன் கோவிலில் நிறுவினான். கி.பி.11ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழ அரசன் முதலாவது இராசேந்திரன் சாளுக்கியர்களை தோற்கடித்து துர்கா, விநாயகர், நந்தி ஆகிய விக்கிரகங்களயும்; கலிங்க மன்னர்களை தோற்கடித்து பைரவன், பைரவி, காளி ஆகிய சிலைகளையும் வங்கத்து அரசனை தோற்கடித்து சிவன் சிலையை யும் கைப்பற்றி தன் தேசத்திற்கு கொண்டு வந்து போரில் வென்றதற்கான பரிசுகளாக மக்களின் பார்வைக்கு வைத்தான். இப்படி இந்து மன்னர்கள் இந்துக் கோவில்களை கொள்ளை அடித்த பட்டியல் நீளமானது. கோவில் அழிப்பும்இந்து மன்னர்களும் பத்தாவது நூற்றாண்டில் இராஷ்ட்ர கூட அரசனான மூன்றாவது இந்திரன் தனது பரம எதிரியான பிரதியாரா அரசனை தோற்கடித்த பொழுது களப்பிரியா விலிருந்த அவனது கோவிலை அழித்தான்; அதனை பெருமையாக பதிவும்செய்தான். 11ம் நூற்றாண்டில் காஷ் மீரை ஆண்ட ஹர்ஷா எனும் மன்னன் கோவில்கள் கொள்ளை அடிக்கவும் அழிக்கவும் தனியாக ஒரு அமைச்சரையே நியமித்தான். அவன் காலத்தில் குஜ ராத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஜைனக்கோவில்கள் கொள்ளை அடிக்கப்பட்டது மட்டுமல்ல; அவை அழிக்கவும்பட்டன.இவையெல்லாம் இசுலாமியர்கள் எனப்படும் துருக்கியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பே இந்து மன்னர்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். இதனை அப்படியே இசுலாமிய மன்னர்கள் தொடர்ந்தனர். துருக்கியர்கள் வருகைக்குப் பின்னரும் கூட இந்துமன்னர்கள் தாம் தோற்கடித்த மன்னர் களின் கோவில்களை கொள்ளை அடிப் பதையும் அவற்றை அழிப்பதையும் தொடர்ந்தனர்.கி.பி.1460ல் ஒடிசா அரசன் கபி லேந்திரா தமிழகத்தின் மீது படையெடுத்த பொழுது காவிரி டெல்டா பகுதியில் இருந்தபல சைவ மற்றும் வைணவக் கோவில் களை முற்றிலுமாக அழித்தான். கி.பி. 1579ம் ஆண்டு முரஹரிராவ் எனும் ஒரு இசுலாமிய சுல்தானின் தளபதி கிருஷ்ணா ஆற்றின் தெற்கே போரின் பொழுது அஹோபிலம் கோவிலை அழித்தது மட்டுமல்ல, அதன் வைடூரியத்தாலான விக்கிர கத்தை கைப்பற்றி தனது சுல்தானுக்கு சமர்ப்பித்தான்.இப்படி இசுலாமிய மன்னர்கள் மட்டுமல்ல; இந்து மன்னர்களும் கூட கோவில்களை கொள்ளை அடித்தனர். அழிக்கவும் செய்தனர். ஏன் அவ்வாறு செய்தனர்? கோவில் ஒரு அரசியல்அதிகாரச் சின்னம் மன்னர்கள் ஆண்ட ஒவ்வொரு தேசத்திலும் ஏதாவது ஒரு கோவில் அந்த மன்னனுக்கு சொந்தமாகவோ அல்லது அவன் வழிபடும் கோவிலாகவோ அல்லது அவனது குலதெய்வம் குடி கொண்டுள்ள கோவிலாகவோ இருந்தது. இந்த கோவில் ஒரு அரசியல் அதிகாரச் சின்னமாக திகழ்ந்தது. தோற்ற மன்னனின் அனைத்து அடையாளங்களையும் அழிப்பது என்பது அந்தக்கால போரின் பிரிக்க முடியாத நியதி!. எனவே அரசியல் அதிகாரச் சின்னமாக விளங்கிய கோவில் ஆபத்திற்கு உள்ளாவது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆனது. எனினும் போரில் வெற்றி கண்ட மன்னன் தோற்ற மன்னனின் கோவிலை மட்டுமே அழித்தான். வேறுஎந்த கோவிலையும் அவன் தொடுவது கூட இல்லை. இது இந்து மன்னர்களுக்கு எவ்வளவு பொருந்துமோ அவ்வளவு . இசு லாமிய மன்னர்களுக்கும் பொருந்தும்.தமிழகத்தில் சைவ மதமும் வைணவ மதமும் புத்துயிர் பெற்ற பொழுது ஏராள மான சமணக் கோவில்களும் புத்தக் கோவில்களும் அழிக்கப்பட்டன அல்லது சைவ மற்றும் வைணவ கோவில்களாக மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான சமணர்கள் கழுவிலேற்றி கொல்லப்பட் டனர். சங் பரிவாரங்கள் இந்த உண்மை களை மூடி மறைத்திட முயல்கின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படு வது இந்தியாவில் மட்டுமல்ல; உல கின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இசுலாமியர்களை போரில் வென்றபொழு தெல்லாம் மங்கோலியர்கள் ஆயிரக் கணக்கான மசூதிகளை அழித்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது ஸ்பெயின் படையெடுத்து வென்ற பொழுது அவர்கள் செய்த முதல் காரியம் மயன் மற்றும் அல்ஸ்டெக் பிரமிடுகளின் மீது இருந்த உள்ளூர் கோவில்களை அழித்துவிட்டு மாதா கோவில்களை கட்டியது ஆகும். கோவில்களுக்கு உதவிய இசுலாமிய மன்னர்கள் கி.பி. 1326ல் முகம்மது பின் துக்ளக் பிதார் மாவட்டத்தில் சிவன் கோவிலை சீர்படுத்திட இசுலாமிய அதிகாரிகளை நியமித்தான். வெகுவிரைவில் கோவிலை சீர்படுத்தி வழிபாட்டை தொடங்கிட உத்தரவாதம் செய்ய வேண்டும் என்பது சுல்தான் இட்ட கட்டளை! ஜிஸ்யா எனும் வரி செலுத்துவோர் எவராக இருப்பினும் அவர்கள் கோவில்களை கட்டிக்கொள்ளலாம் எனவும் சுல்தான் ஆணை பிறப்பித்தான். இதே போல விஜயநகர மன்னன் இசுலாமியர்கள் அதிகமாக வாழ்ந்த இடங்களில் மசூதிகளை கட்ட உதவினான். இது போல கோவில்களுக்கு இசுலாமிய மன்னர்கள் உதவியதும் மசூதிகளுக்கு இந்து மன்னர்கள் உதவியதுமான பல நிகழ்வுகள் வரலாற்றில் பொதிந்துள்ளன. இந்து வகுப்புவாதிகள் மட்டுமல்லாது இசுலாமிய வகுப்புவாதிகளும் கூட இத்தகைய வரலாற்று உண்மைகளை மறைப்பதில் கவனமாக உள்ளனர். சாதாரண மக்களின் பொதுப்புத்தியில் சங் பரிவாரம் திணித்துள்ள வரலாற்றுப் பொய்களை அகற்றுவது மதச்சார்பற்ற சக்திகளின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். மதச்சார்பின்மையை காக்கும் பணியை உழைக்கும் மக்களின் இயக்கங்கள் மீது வரலாறு சுமத்தியுள்ளது. உழைக்கும் மக்கள் அதனை செய்து முடிப்பர் என்பதில் அய்யமில்லை! வரலாற்று விவரங்களின் மூலம் - ரிச்சர்ட் பேட்டனின் ஆய்வுக்கட்டுரை.




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி 

 சென்னை, டிச.2- உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின்மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ளசெய்தி வருமாறு: 





உலகெங்கிலும் கண்ணியமும், சமத்துவமும் மிக்கவாழ்க்கைக்கான தேடலுடன் இருக்கும் எண்ணற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உலகதின வாழ்த்துக்களைஉரித்தாக்கிக்கொள்கிறது. தொழில்நுட்ப உத்தரவாதத்துடன் மாற்றுத் திறனாளிகளின்நிலையான முன்னேற்றம் என்ற முழக்கத்தை 2014ம் ஆண்டின் கருப்பொருளாகக் கடைப்பிடிக்குமாறு உலகநாடுகளை ஐ.நா.சபை கேட்டுக்கொண்டுள்ளது. இது வரவேற்புக்குரியது.இந்தப் பின்னணியில் இந்தியாவிலும், தமிழகத்திலும் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பிரச்சனைகள் உள்ளன. முதலில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறித்து ஒரு முறையான கணக்கெடுப்பு தேவைப்படுகிறது. 2011ல் 22லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகக் கூறிய தமிழக அரசு, தற்போது அந்தஎண்ணிக்கையை 16 லட்சம் என்று குறைத்திருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை இருக்க முடியும்? எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்னும் போது, அறிவியல்பூர்வ கணக்கெடுப்பு அவசியமாகிறது. இரண்டாவதாக நாடு முழுதும் அனைத்து இடங்களிலும், அனைத்துத் துறைகளிலும் ஏற்கப் படக்கூடிய அடையாளச் சான்று வழங்கப் பட வேண்டும். தற்போது வித விதமான அடையாளச் சான்று வெவ்வேறு துறைகளில் கோரப்படுவது மிகுந்த சிக்கலை மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படுத்துகிறது. சான்று கிடைப்பதில் சிரமம், அதைப் பெறுவதற்கான அலைச்சல், சான்று இல்லாததால் தகுதி இருந்தும் பயன் பெற முடியாமை என்று சங்கிலித் தொடராய் பிரச்சனைகள் நீள்கின்றன. இவற்றை, ஒரே சான்று அளிப்பதன் மூலம் தவிர்க்க முடியும்.கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3 சதவிகித ஒதுக்கீடு என்பது சட்ட ரீதியான உரிமை. 3 மாதங்களுக்குள் பின்னடைவு காலிப் பணியிடங்களைக் கண்டறிந்துநிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய, மாநில அரசுகள்நிறைவேற்றாதஅவலம்தொடர்கிறது. இதற்குநடுவே தமிழகத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்தமாதாந்திர உதவித்தொகையும், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி பயனாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்துவலுவான போராட்டங்கள்நடந்துகொண்டிருக்கின்றன.மேலும், பெண் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு இயக்கும் மாற்றுத் திறனாளிபள்ளிகளில் போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். தகுந்த ஏற்பாடுகள் இல்லாத இடங்களில் மாற்றுத்திறனாளிகள், தேர்வுகளில் தோல்வி அடையும் சூழல் நேரிடுகிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் எல்லா அரசு கட்டடங்களும், வாகன நிறுத்தம் உட்பட மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்ட பின்னும், தலைமைச் செயலகத்தில் கூட மாற்றம் வரவில்லை.இவற்றை எல்லாம் உறுதிப்படுத்தும் விதத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்தக் கூடிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு, சட்டக் கூலியைஉறுதி செய்யக் கூடிய ஊரக வேலை உறுதி சட்டத்தைத் தளர்த்தும் முயற்சியையும் கை விட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தமிழகத்தில், சிரமமான நிலைமைகளுக்கிடையில் போராட்டங்களின் மூலம் சில உரிமைகளை மாற்றுத்திறனாளிகள் பாதுகாத்து வருகின்றனர் என்பதுபாராட்டுக்குரியது. தொழில் நுட்ப உத்தரவாதத்துடன் நிலையான முன்னேற்றத்தை அடைய மாற்றுத்திறனாளிகள் மேலும் நீண்ட நெடிய போராட்டப்பாதையில் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தப் பாதையில், மாற்றுத்திறனாளிகளுடன் உடன் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாற்றும் என இந்நாளில் உறுதி கூறுகிறோம்.

நன்றி 
தீக்கதிர்