வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

சனி, 31 ஜனவரி, 2015

UVASUKI: ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு ஸ்தூபி திறப்பு

UVASUKI: ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு ஸ்தூபி திறப்பு: திருச்சி பொன்மலை சங்கத்திடலில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு  ஸ்தூபியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு ஸ்தூபி திறப்பு




திருச்சி பொன்மலை சங்கத்திடலில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் நினைவு
 ஸ்தூபியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் 
பிருந்தா காரத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், 
மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சிராப்பள்ளி, ஜன.29-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர்கள் உமாநாத், பாப்பாஉமாநாத் ஆகியோரின் நினைவு ஸ்தூபி திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று காலை திருச்சி பொன்மலை சங்கத்திடலில் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நினைவு ஸ்தூபியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களான உமாநாத், பாப்பா உமாநாத் இருவரும் இப்போது நம்முடன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. பாப்பாவின் சிரிப்பும், உமாநாத்தின் முகபாவமும் என் கண்முன்னே நிழழாடுகிறது.
இவர்கள் இருவரும் பல்வேறு பாடங்களை நமக்கு கற்றுத்தந்த பல்கலைக்கழகமாக இருந்திருக்கிறார்கள். இருவரும் பல்வேறு விஷயங்களில் மாறுபட்ட தன்மைகொண் டவர்கள். தொழிலாளர்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு உணர்வுதான் இவர்களை ஒன்றிணைத்தது. புரட்சி என்ற இலக்கை முன்நிறுத்தி மனிதனை மனிதன் சுரண்டுகிற போக்கை எதிர்த்துப் போராடினார். நாம் தவறு செய்ய வாய்ப்பே இல்லை என்பதை உமாநாத் நமக்கு கற்றுத்தந்துள்ளார். பாப்பாவின் சுயேட்சையான சிந்தனை அனுபவங்களில் இருந்து நமக்கு பலவற்றை கற்றுத்தந்துள்ளார். ஒரு தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்து நமக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.தமிழக பெண்கள் முன்னேற்றத்திற்காக ஏராளமான பணிகளை செய்துள்ளார். அவரது பணி தமிழகத்து டன் நின்றுவிடவில்லை. துணிச்சல் தைரியம் ஆகிய குணங்கள் கொண்டவர் பாப்பா. எனக்கு மிகப்பெரிய உத்வேகம் உற்சாகம் கிடைக்க இந்த தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். சிந்தனை செயல் வாழ்க்கைஅனைத்திலும் இவர்கள் முழு கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். இன்றைக்கு ஆளும் வர்க்கத்தால் தொடுக்கப்படும் பல்வேறு தாக்குதல்கள் கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிரான போக்கு ஆகியவற்றை எதிர்கொள்ள இவர்களின் துணிச்சலும், உணர்வும் நமக்கு தேவை.
அவர்களது மகள்களையும் கம்யூனிஸ்ட்டுகளாக வளர்த்ததுதான் பெருமை அளிக்கும் விஷயம். இந்த நினைவுச்சின்னம் இந்தியா முழுவதும் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் உணர்வால், உழைப்பால் எழுப்பப்பட்டது. இவர்கள் வழியில் நாம் செங்கொடியை உயர்த்திப் பிடிப்போம். என்றார்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் அமிர்தம், அகில இந்திய ஜனநாயக மாதர்சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, மாநில தலைவர் வாலண்டினா, தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் செயல்தலைவர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாநகர் மாவட்ட செயலாளர் கே.அண்ணாதுரை வரவேற்றார். புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ் நன்றி கூறினார்.


அநீதியான சாதிய அமைப்புகளை மதங்கள் 

கெட்டிப்படுத்துகின்றன


கவுரவக்கொலைகள் எதிர்ப்பு மாநாட்டில் 

பிருந்தாகாரத் சாடல்





புதுக்கோட்டையில் நடைபெற்ற கவுரவக் கொலை எதிர்ப்பு மாநாட்டில் பிருந்தா காரத் உரையாற்றுகிறார். 
மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, 
மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்எல்ஏ உள்ளிட்டோர் மேடையில் உள்ளனர்.
















புதுக்கோட்டை, ஜன.29-
சாதிய அமைப்புகளை கெட்டிப் படுத்தும் வேலைகளை மத அடிப் படைவாதிகள் செய்கின்றனர் என் றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப் பினர் பிருந்தாகாரத்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கவுரவக் கொலைகள் எதிர்ப்பு மாநாடு புதுக்கோட் டையில் புதன்கிழமையன்று நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் பேசியதாவது:ஆண், பெண் இருவருக்கு இடையே இயல்பாக மலர்வது காதல். அது மனம் சம்பந்தப்பட்டது. சில சமயங்களில் தங்களது காதல் வேண்டாமென்று காதலர்கள் பிரிந்துவிடுவதும் நடப்பது உண்டு. இதில் வேறு நபர் உள்ளே நுழைவதற்கு இடமில்லை.
ஆனால், காதலர்கள் எடுக்கின்ற முடிவைத்தாண்டி வெளியி லிருந்து வரும் அரசியல் தலையீடு வெறுப்பாக மாற்றப்படுகிறது. கவுர வக்கொலை தானாக நடந்துவிடுவது கிடையாது. இதற்குப் பின்னால் அரசியல் வாதிகளின் வலுவான தலையீடு இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடையிலிருந்து சொல்கிறோம். காதலர்களின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதில் ஒரு போதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். சாதியை அல்லது மதத்தைத் தாண்டி இணையும் காதலர்களின் சவங்களில் நின்று ஓட்டுக் கேட்பது எங்கள் வழக்கமல்ல.ஹரியானாவில் சாதியின் பெயராலும், கர்நாடகம், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மதத்தின் பெயராலும் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட சில பகுதி களில் தாங்களுக்குள்ளாகவே சில அமைப்புகளை உருவாக்கி திட்ட மிட்டு இத்தகைய சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.பெரியார் பிறந்த தமிழகம் ஒரு காலத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான தளமாக இருந்தது.
இன்றுள்ள சில அரசியல் தலைவர்கள் பொதுமேடையில் பகிரங்கமாக சாதி பெரு மிதம் குறித்து பேசும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில் திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். முற்போக்கான விசயம் குறித்து வாய்திறக்க மறுக்கும் இவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குறித்தசண்டைகளில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.கவுரவக் கொலைகளுக்கு எதிரானப் போராட்டம் என்பது ஜனநாயகப் படுகொலைக்கு எதிரானப் போராட்டமாகும். சாதியும், தீண்டாமையும் இந்தியாவைப் பீடித்திருக்கிற சாபக்கேடாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென் பதே எங்கள் லட்சியம். சாதிய முறையை ஒழித்துக்கட்டாமல் இது நிறைவேறாது என்பதில் உறுதி யாக இருக்கிறோம்.ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின் பேரில் நடக்கும் மத்திய அரசு சாதிய கட்டமைப்பை பாதுகாப்பதற்கு மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு இந்து பெண் இஸ்லாமிய இளைஞனைக் காத லித்தால் மிகப் பெரிய தாக்குதலை இந்த அமைப்புகள் நடத்துகின்றன.மத சடங்குகளைப் பயன்படுத் தாமல் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை சிறப்புத் திருமணச் சட் டம் வழிவகுக்கிறது. இத்தகைய திரு மணத்தில் ஆணோ, பெண்ணோ மதம் மாற வேண்டியதில்லை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, கடினமான விசயமாக மாற்ற முயற் சிக்கிறார்கள். இத்தகைய திருத்தத்தின் காரணமாக மத்தியப் பிரதேசம் குவாலியரில் இந்துத்துவ சக்திகளின் சதியால் ஒரு பெண் தனியாக வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது.மத அடிப்படை வாதிகள் தங்க ளது மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்ற நோக்கில் திட்ட மிட்டுச் செயல்படுகின்றனர். எல்லா மதத்திலும் அடிப்படைவாதிகள் ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் பெண் இருக்க வேண்டும் என நினைக் கிறார்கள். அன்பு செலுத்துவதையே மதங்கள் போதிக்கின்றன. இரண்டு அன்பு உள்ளங்களை வெறுப்பது மதத்திற்கு எதிரானது என்பதை அடிப்படைவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் சக்திகளின் தூண்டுத லோடு கவுரவக் கொலைகள் நடப்பது வெட்கக்கேடான விசயம். சாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் மற்றும் காவல் துறையின் துணையால் கண்ணுக்குத் தெரியாத குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை தடுக்காத அரசும், ஆட்சியாளர்களும் சேர்ந்து செய்கிற குற்றமாகத்தான் நான் பார்க்கிறேன்.இத்தகைய கொடுமையை தடுக்கும் வகையில் வலுவான சட்டங்கள் கொண்டுவர வேண்டுமென நாடாளு மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகின்றோம். அதையே இந்த மேடையிலும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு பிருந்தாகாரத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.


பிள்ளைகளைக் கொலைசெய்வதில் என்ன 

கவுரவம் இருக்கிறது

உ.வாசுகி கேள்வி




புதுக்கோட்டை, ஜன.29 -
சாதிமறுப்புத் திருமணம் செய்பவர் களை கவுரவக்கொலை செய்கிறார்கள். பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்வ தில் என்ன கவுரவம் இருக்கிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.புதுக்கோட்டையில் புதன்கிழமை யன்று நடைபெற்ற கவுரவக்கொலை எதிர்ப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:இந்திய அரசியல் சாசனம் மனுதர்ம சட்டங்களோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என்று சொன்ன ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் தற் பொழுது மத்திய அரசு இருக்கிறது.
மனு தர்மம் சூத்திரனுக்கு கல்வி கூடாது என்றது. சொத்து இருக்கக்கூடாது என்றது. அவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சாதியில் இருந்தாலும் பெண்களை சூத்திரர் களாகவே கருதியது.சாதியப் படிநிலைகளை கெட்டியாகப் பற்றிநிற்கும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள். தற்பொழுது பாடத்திட்டத்திலுள்ள தீண்டாமை ஒரு பாவச்செயல், அனை வரும் சமம் என்ற அம்சங்களை நீக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.இன்னும் ஒருபடி மேலே போய் இஸ்லாமியர்கள் வந்தபிறகுதான் தீண்டாமை யும் வந்தது என்கிறார்கள். மக்களை ஏமாற்ற நினைக்கும் இவர்கள் என்றைக் குமே ஆதாரங்களை முன்வைத்துப் பேசுவதில்லை. இட்டுக்கட்டியே கதையளக் கிறார்கள். சாதி என்ற ஏணிப்படி, ஒருபடியில் நிற்பவர் அடுத்த படிக்கு ஏற வோ, இறங்கவோ முடியாதபடிக்கு கெட்டி தட்டிப்போய் இருக்கிறது.சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தளிர்களை கவுரவக்கொலை செய்கிறார்கள்.
பிள்ளைகளை கொலைசெய்வதில் என்ன கவுரவம் இருக் கிறது. சமூகத்தில் சாதிமறுப்புத் திருமணங் கள் தாங்கமுடியாத குற்றமாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக மக்களின் மனநிலை யிலேயே மாற்றம் வர வேண்டும். அதற்குதலித்துகளின் கையில் நிலம் வேண்டும்.
குறைந்தபட்ச கூலி வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவற்றோடு சேர்த்து பண்பாட்டுத் தளத்திலும் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டார்.சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் சாதிய அமைப்புகள் மீதும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றாத காவல்துறையினர் மீதும் களத்தில் நின்று தொடர்ச்சியாக போராட வேண்டிய கடமை கம்யூனிஸ்ட்டுகளுக்கு உண்டு. இவ்வாறு உ.வாசுகி தனது பேச்சில் குறிப்பிட்டார்.



வெள்ளி, 9 ஜனவரி, 2015

விஞ்ஞானிகளை கொச்சைப்படுத்துவதா? மோடி அரசுக்கு உ.வாசுகி கண்டனம்



புதுக்கோட்டை, ஜன.8-
புராதான காலத்தில் அறி வியல் கண்டுபிடிப்புகள் இருந்ததாகக்கூறி, நமது விஞ்ஞானி களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கொச்சைப்படுத்துகிறது மோடி அரசு என குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் உ.வாசுகி.கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 12-வது மாநாடு புதுக் கோட்டையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டு பேரணி - பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அரசின் கணக்குப்படியே நாட்டில் 4600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். 60 ஆயிரத்திற்கும் அதிக மானோர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். நாங்கள் தேர்தல் பிரச்சாரத்திலேயே சொன்னோம். காங்கிரசைவிட சிறப்பான ஆட்சியைக் கொடுக்க மோடியிடம் மந்திரக்கோல் இல்லை. நாட்டிற்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல; கொள்கை மாற்றமே தீர்வு.
உளறல்கள்
விஞ்ஞானத்தையே கேலிக் குரியதாக ஆக்கும் வகையில் பிற்போக்கான பாதையில் நாட்டை இழுத்துச் செல்லப்பார்க்கிறது மோடி அரசு. நமது விஞ்ஞானிகள் நேரம் காலம் பார்க்காமல் மூளையைக் கசக்கி உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கொச்சைப் படுத்தத் தொடங்கியுள்ளனர் காவிக் கூட்டத்தைச் சேர்ந்த வர்கள். பிள்ளையார் சிலையை காட்டி, புராதான காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததாக நாட்டின் பிரதமரே உளறு கிறார். மகாபாரத காலத்தில் தொலைக்காட்சி இருந்ததாகவும், நாடுவிட்டு நாடு மட்டுமல்ல, கண்டம்விட்டு கண்டம் தாண்டும் விமானங்கள் இருந்ததாகவும், ஸ்டெம்செல் முறை யில் கவுரவர்கள் பிறந்ததாகவும் அறிவியல் மாநாட்டிலேயே கட்டுரை வாசிக்கும் அளவிற்குத் துணிந்துவிட்டனர்.
இதை அனுமதித்தால் பாடத்திட்டத்தையே மாற்றும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, குஜராத்தில் ஹிட்லரைப் புகழ்ந்துஎழுதப்பட்ட பாடத்திட்டம் இருக்கிறது. நிரூபிக்கப்பட்ட உண்மைகளே பாடத்திட்டங் களாக அமைய வேண்டுமே தவிர, வெறும் நம்பிக்கைகளைப் பாடங்களாக ஆக்குவது அறிவியல் மனப்பான்மையைச் சிதைத்துவிடும்.சென்னைக்கு வந்த பாஜக தலைவர் அமித்ஷா தமிழ் வாழ வேண்டுமென்றால் தமிழகத்தில் தமது கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்கிறார்.
அவர்கள்தான் இந்தியையும், சமஸ் கிருதத்தையும் திணித்து தமிழைமட்டுமல்ல, நமதுகலாச்சாரத்தையும் பண் பாட்டையும் சிதைக்கப் பார்க் கிறார்கள்.
போதை தெளிந்தால்....
மக்களை போதையில் வைத்திருப்பதே தமிழக அரசின் ஒரே திட்டமாக உள்ளது. மக்களின் போதை தெளிந்தால் அவர்களின் உயர்மட்ட ஊழல், ஆடம்பர வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டுவிடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு. தமிழகத்தில் ஒரு ஆட்சி நடப்ப தாகவே தெரியவில்லை.
கொலை, கொள்ளை, பாலியல் வன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்கிற அரசியல் தந்திரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்களே மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக முடியும்.இவ்வாறு உ.வாசுகி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
(ந.நி.)

வியாழன், 8 ஜனவரி, 2015

சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு பேரணி-பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது



புதுக்கோட்டை, ஜன.7-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 12-வது மாநாடு பேரணி-பொதுக்கூட்டத்துடன் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று எழுச்சியுடன் தொடங்கியது.புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டானாவிலிருந்து மாலை 5 மணியளவில் தொடங்கிய பேரணியை கட்சியின்மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒன்றியங்கள் வாரியாக செந்தொண்டர் அணிவகுப்பு, குதிரை ஆட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளோடு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க செம்படைப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்எல்ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.செபஸ்தியான், க.செல்வராஜ், ஏ.ராமையன், எம்.முத்துராமலிங்கன், எம்.உடையப்பன், எஸ்.சங்கர், எஸ்.கவிவர்மன், என்.பொன்னி, எஸ்.பொன்னுச்சாமி, கே.சண்முகம், ஏ.ஸ்ரீதர், வி.துரைச்சந்திரன், வரவேற்புக்குழுத் தலைவர் சண்முக பழனியப்பன் ஆகியோர் பேசினர்.
முன்னதாக நகரச் செயலளார் சி.அன்புமணவாளன் வரவேற்க, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி நன்றி கூறினார்.பிரதிநிதிகள் மாநாடு வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.

வியாழன், 1 ஜனவரி, 2015

அனைவருக்கும் ஆங்கில 

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கூலிப்படைகள் அதிகரித்துள்ள தமிழகத்தை அமைதிப்பூங்கா எனச்சொல்ல முடியுமா? மதுரை கூட்டத்தில் உ.வாசுகி கேள்வி



மதுரை,டிச.31-
தமிழகத்தில் குறிப்பாக மதுரை,சிவகங்கை, நெல்லையில் கூலிப்படைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நெல்லையில் 25 நாட்களில் 30 கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியுமா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 21 வதுமாநாடு டிச-28,29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டினையொட்டி டிச-30 ம் தேதி பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது; சென்னையில் நோக்கியா மற்றும் பாக்ஸ்கான் ஆகிய இருபன்னாட்டு நிறுவனங்கள் தங்கள்ஆலைகளை திடீரென மூடியுள்ளன.
இதனால் ஏராளமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம், குடிநீர் மற்றும் வரிச்சலுகை வழங்கப்பட்டிருந்தன. இந்தசலுகைகளால் லாபம் அனுபவித்த பின்பு ஆலைகளை மூடியுள்ளனர். இந்தஆலைகள் மூடப்பட்டதில் மத்திய, மாநில அரசுகளுக்குப் பொறுப்பு இல்லையா? எதிர்காலத்தில் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய புரிந்துணர்வுக்கு கட்டுப்படும் நிறுவனங்களை மட்டுமே தொழில் தொடங்க அனுமதிக்க சட்டமியற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க சட்டமிருந்தும் நெல்லையில்சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகோபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட போது காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது. இதற்குப் பின்னும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலைமைகளுக்குப் பின்னால்தோழர் கோபி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோபியை படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திய போது, அரசு வேலை தவறான முன்னுதாரணம் எனக்கூறினார்கள். இது தான் சரியான முன்னுதாரணம் என்றுநாம் வலியுறுத்தியப் பின் அக்கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக மதுரை,சிவகங்கை, நெல்லையில் கூலிப்படைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. நெல்லையில் 25 நாட்களில் 30 கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்ல முடியுமா?கூலிப்படைக்கும் காவல்துறையினருக்கும் பல மாவட்டங்களில் அண்டர்ஸ்டேண்டிங் இருப்பதாக வரும் புகார்களில் தெரிவிக்கப்படுகின்றன. இதன் மீது தமிழக அரசுஎன்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழல் வழக்கில் முதல் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட வரலாறு எங்கும் நடக்கவில்லை.
மேற்குவங்கம், கேரளா,திரிபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுள்ளது. அரசியல் விரோதிகள் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது ஊழல்குற்றச்சாட்டுக்களை சுமத்தமாட்டார்கள். ஊழலைப் பற்றி பேச ஒரேதகுதியுடைய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். ஊழலின்ஊற்றுக்கண் உலகமயம். ஊழலைஒழிக்கவேண்டுமானால் லோக்ஆயுக்தா கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மோடி தலைமையிலான 100 நாட்கள் ஆட்சியில் 4500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 45 ஆயிரத்திலிருந்து 55 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி உள்ளனர். முன்பிருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் நிலஉடமையாளர்கள் 80 சதவீதம் பேர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று இருந்தது.
ஆனால் மோடி அரசு, விவசாயிகள் அனுமதி தேவையில்லை என்றுபல்லாயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அந்நிய நேரடி மூலதனத்தை இதற்கு மேல் அனுமதிக்க வேண்டாம் எனநிதிக்குழுத்தலைவராக இருந்தபாஜகவைச் சேர்ந்த யஸ்வந்த் சின்கா கூறினார். இப்போது பாஜக அரசு, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதன உயர்விற்காக அவசரச்சட்டம் இயற்றி நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. அத்துடன் பண்பாடு, மொழி மீது தாக்குதலைத்தொடுத்துள்ளது. இதற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி தீக்கதிர்