வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

சிபிஎம் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு

 சிபிஎம் மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்வு



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு பிப்ரவரி 16-19, 2015 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே. வரதராசன், பிருந்தா காரத், ஏ.கே. பத்மநாபன் மற்றும் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,
மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ. வாசுகி, அ. சவுந்தரராசன் எம்எல்ஏ, பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, சுதா சுந்தரராமன் உள்ளிட்டு மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலுமிருந்து 600 பிரதிநிதிகள், 39 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய மாநிலக்குழு
இம்மாநாட்டில் 81 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டு தலைமைக்குழு தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளராக ஜி. ராமகிருஷ்ணன் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உட்பட 15 பேர் கொண்ட மாநில செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
மாநில செயற்குழுமாநில செயற்குழு உறுப்பினர்களாக டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன், கே. தங்கவேல், ப. செல்வசிங், எம்.என்.எஸ். வெங்கட்டராமன், எஸ். நூர்முகமது, ஏ. லாசர், பெ. சண்முகம், என்.குணசேகரன், க. கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலக்குழுவிற்கு முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உள்ளிட்ட 6 சிறப்பு அழைப்பாளர்களும், 2 அழைப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையிலான மாநில கட்டுப்பாட்டுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.விசாகப்பட்டினத்தில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு 50 பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலக்குழு, அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் பட்டியல்







மக்கள் விரோத-மதவாத பாஜக அரசு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத அதிமுக அரசு மாற்றுக் கொள்கைகளை முழங்கும் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்


சிபிஎம் மாநில மாநாடு தீர்மானம்
 

(ஆர்.உமாநாத்-என்.வரதராஜன் நினைவரங்கம் )சென்னை, பிப். 19-தமிழக மக்களின் நலன் காக்க அணி திரள்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மக்களை கசக்கிப்பிழியும் தாராளமயக்கொள்கைகள் மற்றும்மதவெறியின் கலவையாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்த்தும், தமிழக மக்களின் வாழ்வில் எந்த மாற்றத் தையும் ஏற்படுத்தாத அதிமுக அரசின் கொள்கைகளை அம்பலப் படுத்தியும், மக்கள் நல்வாழ்வுக்காக உறுதியோடு போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுக்கொள்கைகளை விளக்கியும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என மாநில மாநாடு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் முன்மொழிய, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் வழிமொழிய, மாநாடு ஏகமனதாக நிறைவேற்றியது. தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் மத்திய ஆட்சியில் அமர்ந்த பாஜக, காங்கிரஸ் பின்பற்றிய நவீன அதே தாராளமயக் கொள்கைகளை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக மத்திய ஆட்சியாளர்களால் செயல்படுத்தப்படும் தாராளமய - தனியார்மயக் கொள்கைகளால் ஏழை,எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத் தினர், சிறு உடைமையாளர்கள், வர்த்தகர்கள் என மிகப் பெருவாரியான மக்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை நிறைவு செய்து பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.
  
சிபிஎம் மாநில மாநாட்டு தீர்மானங்கள்...

தமிழக ரயில்வே-புறக்கணிக்கும் மோடி அரசு
பாஜகவின் மோடி அரசு பதவி ஏற்றபின்புதிய ரயில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப் போவதில்லை என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளித்து நிதி நிலை அறிக்கைகளில் சேர்க்கப்பட்ட திட்டங்களை முடிக்கவே முன்னுரிமை தரப்படும் என்றும் அறிவித்தது. நாடு முழுவதும் மக்கள் கோரிக்கைகளை ஏற்று பல புதிய ரயில் பாதை,
அகலப்பாதை, இரட்டைப் பாதை திட்டங்களை ஆய்வு செய்துதிட்ட மதிப்பு உட்பட முடிவு செய்யப்பட்ட பலதிட்டங்களை கிடப்பில் போட்டு 2014 செப்டம்பர் 24 அன்று அறிவிப்பை வெளியிட்டது.தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படிப் பட்ட 24 திட்டங்களை கைவிடும் முடிவை அது அறிவித்துள்ளது.
கைவிடப்படும் புதிய ரயில் பாதை திட்டங்கள்
சென்னையிலிருந்து போரூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர்; ஆவடி - ஸ்ரீபெரும்புதூர்; இராமநாதபுரம் - தனுஷ்கோடி; அரியலூர் - தஞ்சாவூர்; திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர்; மயிலாடுதுறை - திருக்கடையூர் - தரங்கம்பாடி - திருநள்ளார் - காரைக்கால்; ஜோலார்பேட்டை - ஓசூர் கிருஷ்ணகிரி தர்மபுரி இணைப்புடன்; சத்தியமங்கலம் - மேட்டூர்; ஈரோடு - சத்திய மங்கலம்; சத்தியமங்கலம் - மங்களூர்; மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு மூக்காணூர் வழி யாக; மதுரை - காரைக்குடிக்கு மேலூர், திருப்பத் தூர் வழியாக; திருமானூர் வலம்புரி வழியாக தஞ்சை - அரியலூர்; சென்னைக்கும் வில்லிவாக்கத்துக்கும் இடையே 5வது மற்றும் 6வது பாதை; வில்லிவாக்கம்
- காட்பாடி புதிய பாதை; திண்டிவனம் - ஜோலார்பேட்டை; போடிநாயக்கனூர் - கோட்டயம்; மதுரை - போடிநாயக்கனூர் - கோட்டயம்; இராமேஸ் வரம் - தனுஷ்கோடி; காரைக்கால் - சீர்காழி; இராமநாதபுரம் வழியாக காரைக்குடி - தூத்துக்குடி; தூத்துக்குடி வழியாக இராம நாதபுரம் - கன்னியாகுமரி ஆகிய அனைத்தும் கைவிடப்படுகின்றன.
சென்னை - கன்னியாகுமரி இரட்டைப் பாதை திட்டம்
சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே மின்மயத்துடன் கூடிய இரட்டைப் பாதைத் திட்டம் மிக முக்கியமானதாகும். இதில் செங்கல்பட்டு வரை இரட்டைப் பாதைஉள்ளது. செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை இரட்டைப் பாதை முடியும் தருவாயில் உள்ளது. விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரை 273 கி.மீக்கு இரட்டைப் பாதை வேலை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரூ .1300 கோடி திட்டத்தில் இன்னும் ரூ. 700 கோடி தேவைப்படுகிறது. அது விரைந்து முடிக்கப் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
மதுரையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக் கும்; நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத் துக்கும் 245 கி.மீ தூரம் மின் மயத்துடன் கூடியஇரட்டைப் பாதை போட கள ஆய்வு முடிந்து ரூ.1916 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறினால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் திருவனந்தபுரத்துக்கும் இரட்டைப் பாதை உருவாகி ஏராளமான ரயில் வண்டிகள் தாமதமின்றி ஓட வழி வகுக்கும். ஆனால் பாஜக அரசு இந்த திட்டத்தையும் புதிய திட்டமாக கருதுவதால் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நடைமுறையில் அதுவும் கிடப்பில் போடப்படும்.
நடப்பில் உள்ள திட்டங்கள்
பாஜக அரசு புதிய திட்டங்களை மேற் கொள்ள மாட்டோம்; நடப்பில் உள்ள திட்டங் களை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிப் போம் என்று அறிவித்தாலும் தமிழகத்தின் நடப்பில் உள்ள பல புதிய பாதைத் திட்டங் களையும், சில அகலப் பாதை மற்றும் இரட்டைப் பாதை திட்டங்களையும், கைவிட வும் சிலவற்றை மாநில அரசு நிதி அளித்தால் தான் மேற்கொள்ள முடியும் என்றும் அறிவித் துள்ளது.ஈரோடு - பழனி புதிய பாதை; திண்டி வனம் செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - வாலாஜாரோடு - நகரி புதிய பாதைதிட்டத்தில் திண்டிவனம் -
வாலாஜா ரோடு பாதை; மதுரையிலிருந்து அருப்புக் கோட்டைக்கு தூத்துக்குடி வழியாக புதிய பாதையில் மீளவிட்டான் - மேல் மருதூர் தவிர மற்றவை; சின்ன சேலம் - கள்ளக்குறிச்சி பாதை; மன்னார்குடி - பட்டுக் கோட்டை; தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய பாதை; மதுரை - போடிநாயக்கனூர் அகலப்பாதை ஆகிய வற்றை மாநில அரசு 50 சதவீத நிதி தரவில்லை என்றால் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது பாதைத் திட்டத்தையும் கைவிட முடிவுசெய்துள்ளது.
இருகூர் - போத்தனூர் இரட்டைப் பாதைத் திட்டமும் கைவிடப்படு கிறது.
சுமை ஏற்றி பழிபோட்டுத் தப்பிக்கும் தந்திரம்
மாநில அரசின் மீது சுமையை ஏற்றி விட்டு, அது முடியாத போது மாநில அரசின் மீது பழிபோடும் திட்டமே இது என்று இம்மாநாடு சுட்டிக் காட்ட விரும்புகிறது. இவ்வளவு பெரிய நாட்டின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை ரயில்வே துறை மட்டுமோ அல்லது மாநில அரசோ நிறைவேற்றுவது சாத்தியமல்ல. மக்கள் சீன அரசு, ரயில்வே துறையில் ஆண்டுதோறும் ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்வதைப் போல இந்தியாவிலும் மத்திய அரசுதான் ரயில் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். பல லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வர வேண்டிய வருவாயை கார்ப்பரேட்டுகளுக்கு விட்டுக் கொடுக்கும் பாஜக அரசு,
காங்கிரஸ் அரசைப் போலவே பணம் இல்லை என்ற காரணத்தைக் கூறித் திட்டங்களைத் தட்டிக் கழிப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. கறுப்புப் பணம் ரூ.28 லட்சம் கோடி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 100 நாளில் அதைக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தரப்போவதாக தேர்தல் வாக்கு றுதி அளித்த மோடி அரசு, பணம் இல்லை என்று கூறும் காரணத்தை ஏற்க முடியாது. எனவே மத்திய அரசு, சாக்குப் போக்குகளைக் கைவிட்டு ரயில்வே வளர்ச்சியில் - குறிப்பாக தமிழக ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு வரும் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்திட இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழக அரசும், மாநிலத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்களை மத்திய அரசிடம் வலுவாக வற்புறுத்த வேண்டுமென மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.(தீர்மானத்தை ரயில்வே அரங்கம் சார்பில் ஜானகிராமன் முன்மொழிந்தார்.)

 தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்களை 
திரும்பப் பெறுக!


மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே மத்தியிலும், இவர்கள் ஆளும் மாநிலங்களிலும் முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அவசர கதியில் நடவடிக்கைகளில் இறங்கினர்.
உரிமை பறிக்கும் திருத்தங்கள் தொழிற்சாலை சட்டம், வேலை பழகுநர் சட்டம், குறைந்த பட்ச ஊதியச் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் (பேரேடுகள் பராமரிப்பு மற்றும் அரசுக்கு ஆண்டறிக்கைகள் சரிபார்ப்பதிலிருந்து விதி விலக்களிக்கும்) திருத்த மசோதா2011,
சிறு தொழிற்சாலை சட்டம் 2014 ஆகியவை இதில் அடங்கும். ராஜஸ்தான் பிஜேபி அரசு இதற்கு வெள்ளோட்டமாக தொழில்தகராறு சட்டம் 1947, ஒப்பந்த தொழிலாளர்(ஒழுங்கமைப்பு மற்றும் ஒழித்தல்) சட்டம் 1970 மற்றும் தொழிற்சாலை சட்டம் 1948 ஆகியவற்றில் தொழிலாளிகளின் உரிமைகளை பறிப்பதற்கான திருத்தங்களை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.நமது நாடாளுமன்றத்தில் வேலைபழகுநர் சட்டமும், பேரேடுகள் பராமரிப்பிலிருந்து விலக்களிக்கும் சட்டங்களுக்கு தான் திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, இடதுசாரிகள் எதிர்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளன. சில சட்ட திருத்தங்கள் அவையில் அறிமுக நிலையில் உள்ளன. இதற்கிடையில், ராஜஸ்தானைப் பின்பற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.
வெறும் ரூ.500 அபராதம்!
இந்த திருத்தங்கள் - மிகை நேரப்பணியை ஒரு காலாண்டிற்கு நேரடியாக நூறு மணிநேரம் (தற்போது ஐம்பது மணி நேரம்) ஆக்குவதற்கும் , மாநில அரசுகள் “பொது நலன்” கருதி 125 மணிநேரம் ஆக்கவும் வழிவகை செய்கிறது. மேலும், பணிக்காக பத்தரை முதல் 12 மணி நேரம் வரை பணியிடத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்தொழிலாளிகளை இரவு ஷிப்ட்களில் பாதுகாப்பு அற்ற முறையில் பணியமர்த்தவும் வகை செய்கிறது. அப்ரண்டிஸ் சட்டத்தை தற்போது மீறும் முதலாளிகளுக்கு சிறைத் தண்டனை உட்பட பல தண்டனைகள் வழங்கமுடியும். ஆனால் தற்போதைய திருத்தங்கள் இவை அனைத்தையும் நீக்கி விட்டு ரூ.500/- அபராதத்தோடு நின்றுவிடுகிறது.
குடும்பத்தின் குறைந்தபட்ச தலை அடிப்படையில் குறைந்த பட்ச ஊதியம் தீர்மானிக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், 15வது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளையும் அளவுகோலாக கொள்ளவேண்டும் என்ற ஒருமித்த முடிவுக்கு விரோதமாக தேசிய அடிமட்ட சம்பளம்(சூயவiடியேட குடடிடிச டநஎநட றயபந) என ஒரு அற்பத் தொகையை குறைந்த பட்ச ஊதியமாக்க முயற்சிக்கிறது. இந்த திருத்தங்கள் அனைத்தும் முதலாளிகள் தன் விருப்பத்திற்கு ஏற்ப (லாபத்திற்கு ஏற்ப) தொழிலாளர்களை ‘அமர்த்த அல்லது துரத்த’ வழியமைத்து கொடுப்பது தவிர வேறொன்றுமில்லை.
இடையூறாக உள்ளதாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகள் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் இடையூறாக உள்ளது என தொடர்ந்து கூறி வருகின்றனர்.இது கடுகளவும் உண்மையல்ல.உலக நிதி நெருக்கடிக்கு முந்தைய இந்தியாவின் வளர்ச்சி விகிதம் (ழுனுஞ) 8.5 சதவிதத்தைத் தாண்டி இரட்டை இலக்கை எட்டுமென பேசப்பட்ட காலங்களில் எல்லாம் இந்த சட்டங்கள் இருந்தன.இன்னொருபுறம், நமது நாட்டில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மத்திய தொழிலாளர் சட்டங்களும், நூற்றுக்கணக்கான மாநில சட்டங்களும் இருந்தாலும் இவை அமலாவதைவிட மீறப்படுதலே அதிகம் என்பதை அரசு புள்ளிவிவரங்களும்-
ஐஎல்ஓ ஆய்வுகளும் கூறுகின்றன.பெரும்பான்மையான தொழிலாளர்கள் பணியாற்றும் முறைசாரா தொழில்களில் தொழிலாளர் சட்டங்கள் தற்போதும் அமலாவதில்லை. தொழிலாளர் சட்டங்கள் அமலாக வேண்டிய ஆலைத்தொழிலாளர்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களை சட்ட வரம்பிற்கு வெளியே தள்ளும் முயற்சிதான் இச்சட்டத்திருத்தங்கள்.
கிணற்றில் போட்ட கல்
நாட்டின் 43,44 மற்றும் 45வது முத்தரப்பு தொழிலாளர் மாநாடுகள் ஏற்கனவே ஏகமனதாக நிறைவேற்றிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,000, போனஸ், பி.எப் உச்சவரம்புகளை நீக்குவதற்கான பரிந்துரைகள், கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.ஆகவே, உள்நாட்டு மூலதனத்திற்கும்,வெளிநாட்டு மூலதனத்திற்கும் கதவுகளைத் திறந்துவிடும் போக்கின் ஒரு பகுதியாகவே இந்த தொழிலாளர் சீர்திருத்தம் என்ற இந்த சட்டதிருத்த முன்மொழிவுகளும் நிறைவேற்றப்பட்டதும் அமைந்துள்ளது. எனவே, தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான சட்டதிருத்தங்களை திரும்பப் பெற வேண்டுமென மத்தியஅரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு கோருகிறது.இந்திய தொழிலாளி வர்க்கம் உதிரம் சிந்தி பெற்ற உரிமைகளை பறிக்க நினைக்கும் பிஜேபி அரசின் தொழிலாளர் வர்க்க விரோத முயற்சியை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் அனைத்து போராட்ட முயற்சிகளையும் இம்மாநாடு வரவேற்கின்றது.
உழைப்பாளிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு தனது உளப்பூர்வமான ஆதரவைத் தெரிவிப்பதோடு, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும்இந்த திருத்தங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் உறுதியேற்கிறது.(தீர்மானத்தை எம்.ஆனந்தன் முன்மொழிய, லீமாறோஸ் (கன்னியாகுமரி) வழிமொழிந்தார்)
 
இன்சூரன்ஸ்,ரயில்வே,பாதுகாப்பு துறையில் 
அந்நியரை எதிர்ப்போம்!

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதமாக அதிகரிக்கவும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு வழிவகை செய்வதற்குமாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 21வது மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.நாடாளுமன்றத்தில் 6 ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ள இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தை அங்கு நடத்தாமல், குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்த மறுநாளே அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமானது ஆகும்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு பன்னாட்டு மூலதனத்தை மகிழ்விக்க எடுக்கப்பட்ட அரசியல் முடிவே இது. 2008- உலக நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்காவிலும், வளர்ந்த நாடுகளிலும் பன்னாட்டு வங்கிகளும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் பல திவாலாகின. இந்தியாவில் டாட்டாவோடு கூட்டுத்தொழிலில் ஈடுபட்ட அமெரிக்கன் இண்டர்நேசனல் குரூப்(ஏ.ஐ.ஜி) திவாலின் விளிம்புக்கு சென்ற போது அமெரிக்க அரசாங்கமே அதன் 80 சதவீதப் பங்குகளை வாங்கி காப்பாற்றியது.
ரூ.11 லட்சம் கோடி கொடுத்த எல்ஐசி
அந்நிய முதலீடு வருகை இந்திய அரசின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான நிதி திரட்டலுக்கு உதவும் என்கிற வாதத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கு எல்.ஐ.சி மட்டும் அளித்த தொகை ரூ.7,04,000 கோடிகள். 12 வது திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ரூ.4,50,000 கோடிகளை எல்.ஐ.சி அளித்துள்ளது. ஆனால் அந்நிய முதலீடு 26 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இன்சூரன்ஸ் துறைக்கு வந்துள்ள அந்நிய முதலீடுகள் ரூ.7500 கோடிகளுக்கும் கீழேதான்.
எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பலப்படுத்துவதுதானே தவிர அந்நிய முதலீட்டு அதிகரிப்பல்ல என இம்மாநாடு சுட்டிக் காண்பிக்கிறது.
டிசைகளுக்குப் போகாத தனியார்இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு வழிவகுப்பதே போட்டியை ஊக்குவிப்பதன் நோக்கம் என்பது அரசின் வாதம். ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிராமங்களுக்கோ, குடிசைகளுக்கோ போகவில்லை என்பதுதான் போட்டி அனுமதிக்கப்பட்ட 14 ஆண்டு கால அனுபவம். ஓராண்டு காலத்தில் எல்.ஐ.சி புதிய அலுவலகங்களைத் திறந்துள்ள சிற்றூர்களின் எண்ணிக்கை 1313. இதே காலத்தில் 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடியுள்ள கிளைகள் 732. ஏற்கனவே அந்த மூன்று முக்கியமான அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் - அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி, நெதர்லாந்தின் ஐ.என்.ஜி- இந்திய இன்சூரன்ஸ் கூட்டுத்தொழிலை விட்டு வெளியேறிவிட்டன. லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட அந்நிய முதலீடுகள் இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு வழிவகுக்கவே முடியாது என்பதை இந்திய அனுபவத்தில் இருந்தே இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
10 மடங்கு அதிகரிப்பு
போட்டி வந்தால் புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் கிடைக்கும்; பிரிமியம் குறையும் என்பதெல்லாம் உண்மையல்ல என்பதே அனுபவம். டூ வீலர், ஆட்டோ, அரைபாடி லாரி போன்ற சாமானிய மக்களின் பயன்பாட்டிற்கான வாகனங்களின் மூன்றாவது நபர் காப்பீட்டிற்கான பிரிமியங்கள் தனியார்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 மடங்கு அதிகரித்துள்ளன. தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மீதான புகார்களின் விகிதம் 22 பாலிசிகளுக்கு 1 என்கிற அளவுக்கு - மொத்த புகார்கள் 2,89,336- உள்ளன. எல்.ஐ.சியோ 99 சதவீத உரிமப் பட்டுவாடாவோடு உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.
காப்பீட்டுத் துறையில் நாடு முழுவதும் 12 லட்சத்து 75ஆயிரம் முகவர்கள் ஆயுள் காப்பீட்டு கழகத்தை தங்களின் வாழ்வாதாரத்துக்காக நம்பி செயல்பட்டு வருகிறார்கள். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை பலப்படுத்துவதே இவ்வளவு எண்ணிக்கையிலான முகவர்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பதாக இருக்கும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஒரே நிறுவனமாக உருவாக்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சீரழிக்கப்படும் பிஎஸ்என்எல்
இதே போல இந்திய நாட்டின் இதர துறைகளிலும் இதே அனுபவத்தையே அந்நிய நேரடி முதலீடுகள் ஏற்படுத்தியுள்ளன. மின்சாரத்துறையில் வந்த அந்நிய நிறுவனங்கள் என்ரான், ஏஇஎஸ் கார்ப்பரேசன் போன்றவை தோல்வியைத் தழுவின. பிஎஸ்என்எல் நிறுவனத்தை துவக்க காலங்களில் செல்பேசித் துறையில் தடுத்து அந்நிய முதலீட்டை ஊக்குவித்தபோது உள்ளே வரும் அழைப்புகளுக்கு கூட கட்டணங்கள் இருந்தன. இப்போதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சீரழிக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. ரயில்வே துறையில் 100 சதவீதம் அந்நிய மூலதனத்திற்கு மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிற்குள் அந்நிய வங்கிக்கிளைகள் திறப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
அனைவருக்குமான வங்கிச்சேவை என்கிற இலக்குகளுக்கு இன்றும் பொதுத்துறை வங்கிகளே உதவுகின்றனவே தவிர அந்நிய, தனியார்களின் பங்களிப்பு ஏதுமில்லை. பொதுத்துறை நிதிகளை உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும். 2014 டிசம்பர் 22ந்தேதி கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும் கைவிடப்படவேண்டும். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் உள்ளதென்று அமைச்சக மட்டங்களிலுள்ள கருத்துக்களையும் மீறி பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படுகிறது. ரயில்வே துறையிலும் அனுமதிக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வரும் அந்நிய முதலீடுகள் சமூக நோக்குடனான செயல்பாட்டிற்கு எதிராக உள்ளன. புதிய தொழில் நுட்பத்தைப் பெரிதாகக் கொண்டு வரவில்லை. வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. ’ மேக் இன் இந்தியா’ முழக்கம் இந்திய தொழிலாளர்களின் உரிமைகளையும், பயன்களையும் பறிக்கும் என்பதன் நளினமான வடிவமே ஆகும். மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து பொதுத் துறைகளுக்கு எதிரான கொள்கைகளை வகுக்கும் வேளையில்அதற்கு எதிரான திரட்டல்களையும், கருத்துருவாக்கத்தையும் மேற்கொள்ளுமாறு அனைத்து உழைப்பாளி மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.(தீர்மானத்தை விஜயா (மதுரை) முன்மொழிந்தார்.
சங்கர் (காஞ்சிபுரம்) வழிமொழிந்தார்.)

 சிபிஎம் மாநாட்டில் மக்கள் 
 வெள்ளம்...

மாநாட்டுப் பணிகளில் தீக்கதிர் குழு...சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்21வது மாநில மாநாட்டின் செய்திகளையும், புகைப்படங்களையும் வழங்கிய குழுவினர் அ.குமரேசன், அ.விஜயகுமார், சி.ஸ்ரீராமுலு, செ. கவாஸ்கர், ம.மீ. ஜாபர்உசேன், எஸ். ராமச்சந்திரன், சி. முருகேசன், வின்சி, வீரபத்ர லெனின், மணிசுந்தரம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு பிப்ரவரி 19 வியாழனன்று சென்னையில் பேரெழுச்சியுடன் நிறைவுபெற்றது. நிறைவு நாளில் ராயப்பேட்டை மருத்துவமனை எதிரில் (ஒய்எம்சிஏ திடல்) தோழர் வி.பி.சிந்தன் நினைவாக பெயரிடப்பட்ட திடலில் காலை 10 மணி முதலே ஆயிரமாயிரமாய் மக்கள் குவிந்தனர்.
கலை, இசை, நாடகம், பட்டிமன்றம் என ஏராளமான குழுக்களின் நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணம் இருந்தன.தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் செங்கொடி ஏந்தி சாரை சாரையாக, குடும்பம் குடும்பமாக தோழர்கள் பொது மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.இந்நிலையில், பிரதிநிதிகள் மாநாடு முடிவடைந்து, மாலை 4 மணியளவில் வி.பி.சிந்தன் திடலில் பொது மாநாடு நடைபெற்றது.
முன்னதாக மாபெரும் செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புக்குழுச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையேற்றார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், கே.வரதராசன், ஏ.கே.பத்மநாபன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத் மற்றும் ப.செல்வசிங், க.பீம்ராவ், எல்.சுந்தரராஜன், கே.கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.

இலங்கைத்தமிழ் மக்களுக்கு அதிகபட்ச சுயாட்சி அதிகாரம் வழங்குக!

அரைநூற்றாண்டுக்கு மேலாக இலங்கைத்தமிழர்கள் அனுபவித்து வரும் வலியும், வேதனைகளும் உலகறிந்தது. இலங்கை ராணுவம், தமிழ் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. தமிழ் மக்களின் வீடுகள், வியாபார மற்றும் தொழில்நிறுவனங்கள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன. குடியிருப்புகள், மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்கள் மற்றும் கோயில்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தி பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பச்சிளங்குழந்தைகளும் இலங்கை ராணுவத்தின் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. வாழ்விழந்த சில லட்சம் தமிழ் மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சொந்த நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாடு உள்ளிட்டு பல நாடுகளுக்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தார்கள்.மிகப்பெரும் மனிதப் பேரழிவுஇத்தாக்குதலின் உச்சகட்டமாக, முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் மிகப்பெரும் மனிதப்பேரழிவு ஏற்பட்டது.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்த பின்னரும், அதிகாரத்திலிருந்த ராஜபக்சே அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண துரும்பைக் கூட அசைக்கவில்லை. தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக்குழுவின் அறிக்கை மீதும், இலங்கை அரசாலேயே நியமிக்கப்பட்ட போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ராஜபக்சே அரசு மறுத்து விட்டது.
தமிழ் மக்கள் சொந்தப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு மறுவாழ்வு அளிப்பது, சிங்கள மக்களுக்கு இணையான சமஉரிமை வழங்குவது, தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற வைப்பது போன்ற எந்த நடவடிக்கையையும் ராஜபக்சே அரசு மேற்கொள்ள மறுத்து விட்டது. வடக்கு மாகாணத்தில் பதவியேற்ற விக்னேஸ்வரன் அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட வழங்கவில்லை.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சிங்கள வெறியை கிளப்பி, மூன்றாவது முறையாக தனது குடும்பத்தின் ஆட்சியை நீடித்துக் கொள்வதற்கான முயற்சிகளை ராஜபக்சே மேற்கொண்டார்.நடைபெற்ற அதிபர் தேர்தலில் சொந்த கட்சியில் ஏற்பட்ட பிளவு, கடைபிடித்த மக்கள் விரோதக் கொள்கைகளால் உள்நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி, தமிழர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களது எதிர்ப்பு போன்றவைகளால் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டார்.
அவரது அரசில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேன எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார். சிறிசேன அரசின் நடவடிக்கைகள்புதிதாகப் பதவியேற்றுள்ள மைத்ரிபால சிறிசேன அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் முக்கியத்துவம் உடையதாகும். வடக்கு மாநில அரசின் ஆளுநராகவும், தலைமைச் செயலாளராகவும் இருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
13வது அரசியல் சட்டத் திருத்தம் கூடுதல் அதிகாரத்துடன் அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியில் ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டு, பத்திரிகையாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அனைவருக்கும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றப்பட்டு நாடாளுமன்ற ஆட்சி முறைக்கான சட்டத்திருத்தம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக சிறிசேன இந்தியாவுக்கு வந்திருப்பதும், இந்திய அரசுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இருப்பினும் தமிழ் மக்கள் வாழ்நிலையும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பழைய நிலைமையே நீடித்து வருகிறது என்பது கவலைக்குரியதாகும். கடந்த பல பத்தாண்டுகளாக இலங்கைத்தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள கொடுமைகள்குறித்து இயற்கையாகவே தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கமும், ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிட பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் மாறுபட்ட வழிமுறைகளை வற்புறுத்தி வந்துள்ளது அறிந்ததே.நிரந்தரத் தீர்வுக்கு என்ன வழி? துவக்க காலத்திலிருந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மாநிலங்கள் உருவாக்கப்படவும், தமிழ் மக்களுக்கு சமத்துவ உரிமைகள் மற்றும் தமிழ்மொழிக்கு சமஅந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.
இத்தகைய வழிமுறையே இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட உதவும் என்பதை கடந்தகால அனுபவங்கள் உணர்த்தியுள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காண கீழ்க்கண்ட அம்சங்களை இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும், அவைகள் நிறைவேற்றப்படுவதற்கு தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை பயன்படுத்தி இந்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.
அதிகபட்ச சுயாட்சி அதிகாரம்1. இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை கூடுதல் அதிகாரத்துடன் செயல்படுத்திட வேண்டும். தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகபட்ச சுயாட்சி அதிகாரங்கள் அளித்திட வேண்டும். தமிழர் வாழும் பகுதியில் ராணுவம் வாபஸ் பெற்று மாநில அரசின் நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும்.சிங்களக் குடியிருப்புகளை அப்புறப்படுத்துக!2. சிங்கள மக்களுக்கு நிகராக தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
அவர்களது சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வேலை, கல்வி, சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஒட்டுமொத்தத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வாழ்விற்கான அனைத்து உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.
விசாரணை நடத்துக!3. தொடர்ந்து இலங்கைத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட எண்ணற்ற தாக்குதல்கள் குறித்தும் 2009 மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட மனிதப் பேரழிவு மற்றும் மனித உரிமைகள் மீறல் குறித்து முழுமையான, சுதந்திரமான, நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச, நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களில் அனுபவம் பெற்றவர்களைக் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு அமைத்து விசாரிக்க வேண்டும்.
ஐ.நா. சபை பொதுச்செயலாளரின் ஆலோசனைக்குழு மற்றும் இலங்கை அரசு அமைத்த போர் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.ஐ.நா. அறிக்கை தாமதம் கூடாது4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் சார்பில் மேற்கொண்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை தாமதிக்காமல் சமர்ப்பிக்க வேண்டும். இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் அவசரம் கூடாது! தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் அவசரம் காட்டக்கூடாது. சொந்த நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறவர்களுக்கு புனர்வாழ்வுக்கான உத்தரவாதமான ஏற்பாடுகளைத் செய்து தர வேண்டுமென இந்திய - இலங்கை அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநாடு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.நெஞ்சை உறைய வைக்கும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைத்தமிழ் மக்கள் கண்ணியமான வாழ்வு மேற்கொள்ளும் வகையில் அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும்,இதனை நிறைவேற்ற இந்திய அரசு ராஜிய ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டுமெனவும் தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது தமிழ்நாடு மாநில மாநாடு வேண்டிக்கொள்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாட்டில், மத்தியக் குழுஉறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏமுன்மொழிய, மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி வழிமொழிய, நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதில் அவசரம் காட்டக்கூடாது. சொந்த நாட்டுக்குத் திரும்ப விரும்புகிறவர்களுக்கு புனர்வாழ்வுக்கான உத்தரவாதமான ஏற்பாடுகளைத் செய்து தர வேண்டும்.நெஞ்சை உறைய வைக்கும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைத்தமிழ் மக்கள் கண்ணியமான வாழ்வு மேற்கொள்ளும் வகையில் அனைத்து உரிமைகளையும் உறுதிப்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சிபிஎம் மாநாடு எழுச்சித் துவக்கம்,செங்கொடி இயக்கத்திற்கே எதிர்காலம்!




தமிழக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21வது மாநாடு சென்னையில் திங்களன்று (பிப்.16) எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் தொடங்கியது.


தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு தலைவர்களும் மாநாட்டுப் பிரதிநிதிகளும் அஞ்சலிசெலுத்திய பின்னர் காலை 10 மணிக்கு பொது மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற பொதுமாநாட்டில் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான க.பீம்ராவ் வரவேற்றுப்பேசினார். அஞ்சலி தீர்மானத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் முன்மொழிந்தார். 

இதனைத் தொடர்ந்து மாநில மாநாட்டை தொடங்கிவைத்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் சிறப்புரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் மாநாட்டை வாழ்த்திப்பேசினார். பொதுமாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், பிருந்தாகாரத், ஏ.கே.பத்மநாபன், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,

மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத், சுதா சுந்தரராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்துணைத்தலைவர் கே.சுப்பராயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள், கட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என பெரும்திரளானோர் கலந்துகொண்டனர்.


 நன்றி தீக்கதிர்



புதன், 11 பிப்ரவரி, 2015

ஊழல் ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தில் உ.வாசுகி சாடல் அஸ்திவாரம் போட்டது திமுக கட்டடம் கட்டியது அதிமுக




ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய உ.வாசுகி.அருகில் சிபிஎம் வேட்பாளர் கே.அண்ணாதுரை மற்றும் கே.முகமதலி உள்ளிட்டோர்.


திருச்சிராப்பள்ளி,பிப்.10-
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. அண்ணாதுரையை ஆதரித்து திங்களன்று மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அம்பேத்கர் நகர், அழகிரிபுரம், ரயில்வே பி கிராஸ், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசிய தாவது:- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவினர் பணம்கொடுத்து வாக்கு கேட்கவேண் டிய அவசியம் என்ன? சொல்வதற்கு ஒன்றும் இல்லாததால் பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்க முயற்சிக்கின்றனர். ஜெயலலிதாவின் இந்த நிலைக்கு விதியோ, சதியோ காரணம் இல்லை. இது அவர்கள் மதி போன வழியில் வந்தது. ஊழலுக்கு திமுக அஸ்திவாரம் போட்டது.
அதன்மேல் அதிமுக கட்டிடத்தை கட்டிவருகிறது. `திருமங்கலம் பார்முலா’வை தமிழகம் முழுவதும் தப்பாமல் அதிமுக செய்து வருகிறது. தமிழகத்தில் படித்த 90 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இது போன்ற பல அடிப்படையான பிரச்சனைகளைப் பேசாமல் பணம் கொடுத்து மக்களின் வாயை அடைத்து விடலாம் என்று நினைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் மோடி கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார். ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகியும் ஒரு ரூபாய்கூட கொடுக்க வில்லை. மற்ற கட்சிகளுக்கு பொதுத்தொகுதியில் தலித்களை நிறுத்த தைரியம் உள்ளதா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே சாதி, மதம் பார்க்காமல் சட்டமன்றத்தில் மக்கள்பிரச்சனைகளை உரக்கப் பேசும் தகுதியுள்ள திறமையான, மக்களுக்காக உழைக்கக்கூடியவரை வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது.
எனவே உங்களுக்காக உழைக்கக்கூடிய அண்ணாதுரைக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.வாக்கு சேகரிப்பின் போது மாநிலக்குழு உறுப்பினர் கே.முகமது அலி, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சம்பத், ஜெயபால், ரேணுகா, நடராஜன், சிபிஐ தலைவர்கள் சுரேஷ், திராவிடமணி, பீர்முகமது உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

வியாழன், 5 பிப்ரவரி, 2015



முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொகையை உடனடியாக வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.