வலைப்பதிவாக்கம் >>>>>>>>>>>>>>> சுந்தரக்கண்ணன் >>>>>>>>>>>>>>>>> 9442352000

x

x
தோழியர் பிருந்தா கரத்துடன்
U.Vasuki Com. Vasuki, aged 57 years, she is B.Com graduate, she is a member of the Central Committee of the CPI(M) and National Vice President of the All India Democratic Women’s Association. She has been working since 1977 as a CPI (M) activist. She had been a bank employee for many years, and took voluntary retirement in 2000 to work as a full time worker of the party. She has discharged several important responsibilities in AIDWA and has led and participated in many struggles against gender injustice and for gender equality. These include the exposure of Premananda, the fight for justice for Padmini of Chidambaram, a victim of police atrocities, the struggle against Coca Cola in Padamathur in Sivaganga district, the fight for justice to girl students and residents in hostels who were sexually harassed in several districts including Chennai, Kanchipuram and Madurai, and many other struggles. She has also actively participated in the struggles against untouchability in Uthapuram, in Madurai, in Pudukkottai and elsewhere. She has fought for the basic issues of people in Chennai and elsewhere in the state. She is married to A.B.Viswanathan. She has a daughter named Anupama. Vasuki’s father is R.Umanath, an outstanding parliamentarian, a member of the Politbureau of the CPI(M) for many years, and currently, a member of the Central Committee of the CPI(M). Her mother, the late Pappa Umanath, was one of the foremost leaders of the CPI(M) and of AIDWA, and had also served as a member of the Tamil Nadu Legislative Assembly.
<=============================================================================================================>
இவ் வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்பது உங்கள் அன்புத்தோழர் உ.வாசுகி
<=============================================================================================================>

U.VASUKI

U.VASUKI

U Vasuki

U Vasuki

திங்கள், 13 நவம்பர், 2017

திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் உ.வாசுகி சாடல்



       ..................................................................................................................................................................................................ஏழைகளின் உணவைப் பறித்து பட்டினிச் சாவில் தள்ளும் ஆட்சியாளர்கள்!
                   திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் உ.வாசுகி சாடல்
திருப்பூர், நவ.13 -

தமிழகத்தில் ஏழைகளின் உணவைப் பறித்து ஜார்கண்ட் மாநிலத்தைப் போல் பட்டினிச் சாவில் தள்ளும் செயலை மத்திய,மாநில ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி கூறினார்.“உணவு, வேலை எங்கள் உரிமை!” என்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு முழக்கத்தின்படி திருப்பூரில் திங்களன்று மாதர் சங்கம் சார்பில் மாநகராட்சி காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க தெற்குமாநகரச் செயலாளர் சி.பானுமதிதலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில்:
உணவுஉரிமைச் சட்டம் அனைவருக்கும்உணவை உத்தரவாதப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களின் கொள்கை ஏற்கெனவே இருக்கும் உணவுப் பாதுகாப்பை பாழ்படுத்துவதாக இருக்கிறது. அரிசி, மண்ணெண்ணை அளவைபடிப்படியாகக் குறைக்கின்றனர். சர்க்கரை விலையை உயர்த்துகின்றனர். பருப்பு காணாமல் போய்விட்டது. ரேசனில் ஸ்மார்ட்கார்டு தருவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஸ்மார்ட் கார்டில்“என்பிஎச்எச்” என முத்திரை குத்திவிட்டால் அவர்களுக்கு எந்தப் பொருளும் கிடையாது.அதேபோல் முதியோர் ஓய்வூதியம், விதவைகள், நலிவடைந்தோர் உதவித் தொகை திட்டங்களையும் பெரும் லஞ்சம் கொடுத்துத்தான் வாங்க முடியும். அதிலும் பெரும்பாலோருக்கு உதவித்தொகை மறுக்கப்படுகிறது.
முதியோர் வாழ்வதே கேள்விக்குறியாக்கப்படுகிறது. நூறுநாள் வேலைத் திட்டமும் சீர்குலைக்கப்படுகிது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூரில் பனியன் தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் செல்லா பணம், ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு திருப்பூர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.இந்த நெருக்கடி நிலையில் ஏழை உழைப்பாளி மக்களுக்கு ரேசன் உணவுப் பாதுகாப்பையும் பறிக்கின்றனர். உடனடி நிவாரணத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மாற்றத்துக்கும் மாதர் சங்கம் குரல் கொடுக்கிறது.
உணவு, வேலை உரிமைகளைப் பறிப்பதற்கு அடிப்படை காரணம், மத்திய மோடி அரசு, மாநில எடப்பாடி பழனிச்சாமி அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகளே அடிப்படை காரணம். பணக்காரர்களுக்கு வரி விதித்து ஏழைகளுக்கு நலத்திட்டங்களை செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் ஏழைகளின் உணவு, வேலை உரிமையைப் பறிக்கின்றனர். அதே சமயம்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கின்றனர். விவசாயிகள் கடன் தள்ளுபடி அளிக்க மறுப்பதுடன், கடனை வசூலிக்க வங்கிகள் ரௌடி பட்டாளங்களை ஏவுகின்றன. ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடிசெய்யப்படுகிறது. எனவே ஆட்சியாளர்களின் கொள்கைகளை மாற்றினால்தான் ஏழை, எளிய மக்களின் உணவு, வேலை உரிமையைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பவித்ராதேவி, மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி,தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.லட்சுமி ஆகியோர் உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, மாவட்டப் பொருளாளர் ஏ.ஷகிலா உள்பட இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று உணவு, வேலை உரிமை கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

ஆனைமலை - நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்றுக சிபிஎம் உடுமலை ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்


உடுமலை , நவ.12-
ஆனைமலை நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சிபிஎம் உடுமலை ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய மாநாடுஞாயிறன்று பாலப்பட்டியில் வாளவாடி எஸ்.மணி, குரல்குட்டை பெ.ராமகிருஷ்ணன் நினைவரங்கத்தில் (செல்வ விக்னேஷ் திருமண மண்டபம்) நடைபெற்றது. மூத்த தோழர் எஸ்.செல்லமுத்து கொடியேற்றி வைத்தார். மத்தியக்குழு உறுப்பினா உ.வாசுகி மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதைத்தொடர்ந்து ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. தீர்மானங்கள்இம்மாநாட்டில், திருமூர்த்திமலை, அமராவதி அணைகளை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அணைகளில் போதிய தண்ணீர் உள்ள நிலையில், அதிகாரிகளின் அலட்சியத்தால் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை வேண்டும்.
நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீமானங்கள் நிறைவேற்றப்பட்டது. இரண்டு கமிட்டிகளாக பிரிப்புமுன்னதாக, இம்மாநாட்டில் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழுவானது உடுமலை ஒன்றியம் மற்றும் மலை அமைப்புக்குழு என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில் உடுமலை ஒன்றிய கமிட்டிக்கு புதிய செயலாளராக கி.கனகராஜ் மற்றும் உடுமலை மலை அமைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜி.செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் மாலையில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீமானங்களை விளக்கி பாலப்பட்டியில் பொதுகூட்டம் நடைபெற்றது.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மாதர் சங்க மாநாட்டுப் பேரணி ஆயிரக்கணக்கான பெண்கள் அணிவகுப்பு





நாகர்கோவில், ஆக.13-

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14 வது குமரிமாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழ மையன்று பறக்கையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் லீமாறோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ரகுபதிவரவேற்றார். மாநில செயலாளர்கள்என்.உஷா பாசி, எஸ்.கே.பொன்னுத்தாய், மாநில துணைத்தலைவர் டி.ஆர்.மேரி, ஆகியோர் உரையாற்றினர். அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். வரவேற்புக்குழு பொருளாளர் உலகம்மாள் நன்றி கூறினார். முன்னதாக தெங்கம்புதூர் சந்திப்பிலிருந்து பறக்கை வரை ஆயிரக்கணக்கான மாதர்கள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சாரதா பாய், எம்.மேரி எஸ்தர் ராணி,சுஜா ஜாஸ்பின், லலிதா, ஆனிடெய்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உ.பி.யில் 63 குழந்தைகள் பலியான துயரம் 5 நாட்கள் கண்டுகொள்ளாத யோகி ஆதித்யநாத்


தீக்கதிர் செய்தி
உ.வாசுகி 

குற்றச்சாட்டு
நாகர்கோவில், ஆக.13-
உத்தரப்பிரதேச அரசு மருத்து வமனையில் 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிர்ப்பலி ஆகும் வரை அம்மாநில முதல்வர் யோகிஆதித்யநாத் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக உ.வாசுகி குற்றம்சாட்டினார்.நாகர்கோவிலில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் அதிக விலை வழங்குவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்களித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் விவசாய விரோத கொள்கையையே அமல் படுத்தி வருகின்றனர்.
கேஸ் மானியம் ரத்து செய்யப்படும் என அறிவித்த மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எதிர்ப்பு வந்த பிறகு கேஸ் மானிய ரத்து அறிவிப்பிலிருந்து பின் வாங்கி னார். தற்போது இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றாலும் அவர்கள் பின்பற்றும் நவீன தாராளமய கொள்கையின் ஒருபகுதியே மானியவெட்டு. எனவே இது மக்கள் தலையில் தொங்கும் கத்தியாக உள்ளது.50 சதவீதம் பேருக்குத்தான் ரேசன் வழங்கமுடியும் என்ற மத்திய அரசின்  முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. உணவுபாதுகாப்பு சட்டத்தின்படி ஒருகுடும்பத்தின் ஆண்டு வருமானம்1 லட்சம் ரூபாய் இருந்தால் ரேசன்பொருட்கள் வழங்கப்படாது எனக்கூ றுவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் என்றால்மாதத்திற்கு 8333 ரூபாய்.
இதனால்ஒரு குடும்பத்தில் 3 பேர் முறை சாரா தொழிலில் ஈடுபட்டு ஒவ்வொருவரும் மாதம் 3000 ரூபாய் சம்பா தித்தால் கூட உணவு மானியம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கார்ப்பரேட்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மானியமாக மத்திய அரசு வாரி வழங்கும் போது சாதாரண ஏழை மக்களுக்கான மானியத்தை ரத்து செய்வது எந்த விதத்தில் சரியானது?மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தனது கட்சியை, இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கப் பட்டாலோ, கொல்லப்பட்டாலோ தமிழகம் கலவர பூமியாக மாறும் என கலவரத்தை தூண்டும் வகையில், பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இந்த பேச்சு பொறுப்பான பதவியில் இருக்கும் மத்தியஅமைச்சருக்கு அழகல்ல.மாநிலத்தில் கலவரத்தை ஏற் படுத்தும் நோக்கில் பேசிய மத்திய அமைச்சரை கண்டிக்காத தமிழக அரசு மக்களுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்துகிறது.
துண்டுப் பிரசுரம் வழங்குவதும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டிய குற்றமா? இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்கிற கேள்வி தான் மக்கள் மத்தியில் எழுகிறது.கும்பகோணம் தீவிபத்தில் 94குழந்தைகள் பலியான வழக்கில்குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆகஸ்ட் 7 ந்தேதி முதல் 11 ந்தேதி வரை 63 குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால் 5 தினங்களாக 63 குழந்தை கள் பலியாகும் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உண்மையை மூடி மறைக்காமல், யார் தவறு செய்தார்கள் என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய வன்கொடுமைகள், சாதி ஆணவ கொலைகளை தடுக்க அரசு, வன்கொடுமை தடுப்பு சட்டம்இயற்றி அமல்படுத்த வேண்டும். மதுரையில் சாதி மறுத்து திருமணம் செய்ததற்காக பெற்றோரால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் விமலா தேவிக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கின் முதல்கட்ட தீர்ப்பில்,சாதி மறுத்து திருமணம் செய்யும் இளம்தம்பதிகளை சாதி ஆணவ கொலையிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கொண்ட சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்என உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தற்போது மதுரைமாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டுள்ள இந்த திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் சாதி ஒழிப்புக்காக, சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக அரசு சீர்திருத்த பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும். நாடு முழுவதும் பெண்களு க்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்களுக்கு எதிரானவன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள், வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரி த்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க,பெண்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017


அனைத்து மதுபான கடைகளையும் இழுத்து மூடிட
மாதர் சங்க கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்கோவை, ஆக. 10 -

தமிழக மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் அனைத்து மதுபான கடைகளையும் இழுத்து மூடிட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட 15 வது மாநாடு வலியுறுத்தியுள்ளது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 ஆவது கோவை மாவட்ட மாநாடு துடியலூர் கலைமணி நினைவரங்கில் வியாழனன்று பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாவட்ட தலைவர் எஸ்.அமுதா மற்றும் டி.விஜியா, பி.மோகனசுந்தரி தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவர் எஸ்.சாமூண்டீஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். மாநாட்டுஅறிக்கையை மாவட்ட செயலாளர் எ.ராதிகாவும் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜோதிமணியும் முன்வைத்தனர்.
முன்னதாக மாநாட்டை வாழ்த்தி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தீபக்சந்திரகாந்த் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் மாதர்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் மகளிர் பிரச்சனை குறித்து வரும் பெண்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யும், மகளிர் காவல்நிலையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். மாதர்சங்கத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.
பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாதுகாப்பாக குழந்தைகளுக்கு பால் புகட்டும் வகையில் பாலூட்டும் மையங்கள் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவராக அமுதா, செயலாளராக ராதிகா, பொருளாளராக ஜோதிமணி, துணைத்தலைவர்களாக ராஜலட்சுமி, பங்கஜவல்லி, சாமுண்டீஸ்வரி, துணைச்செயலாளர்களாக டி.விஜயா, ஆர்.சாந்தா, விஜயலட்சுமி மற்றும் 25 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம் உரையாற்றினார்.

ஞாயிறு, 16 ஜூலை, 2017

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை சட்டமாக்கு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி உரையாற்றினார். (வலது) திருப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார்.

திருப்பூர்
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தோர் பெருந்திரளாகப் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.இதில் திருப்பூர் மாவட்டச் செய லாளர் கே.காமராஜ் தலைமையில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி, ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பழனிசாமி ஆகியோர் கோரிக்கை யை வலியுறுத்தி பேசினர்.கோவை மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், செ.முத்துக்கண்ணன் மற்றும் பெருந்திரளான பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தற்போதைய ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. கருத்தொற்றுமை என்ற சால்ஜாப்பு தேவையில்லை. ஆனாலும், சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இத்தனைக்கும் மோடி ஆட்சிக்கு வந்த உடன், குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டபோது, இந்த அரசு இச்சட்டத்தைக் கொண்டு வரும் என்றே கூறினார். ஆனாலும் செய்யவில்லை.
இம்மாதம் 17ஆம் தேதி துவங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே பெண்களுக்கு 33சதவீதம் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நிறைவேற்று என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்தில் 10 மையங்களில் மண்டல அளவிலான இயக்கம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு 6 பேரிலும் ஒருவர் பெண்
இக்கோரிக்கைக்கு நீண்ட போராட்ட வரலாறு உண்டு. தேச விடுதலைப் போராட்டத்தில் ஆண்களோடு, பெண்களும் களமிறங்கி போராடிய நிகழ்வுகள் ஏராளம் உள்ளன. அன்றைய காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கைதாகி சிறைச் சென்ற ஒவ்வொரு 6 பேரிலும் ஒருவர் பெண். அகிம்சை வழியிலான போராட்டம், சத்தியாகிரகங்கள், சிட்டகாங் ஆயுத கிடங்கைக் கைப்பற்றும் தீவிர போராட்டங்கள், சமூகச் சீர்திருத்த இயக்கங்கள், தெலுங்கானா, தேபாகா போன்ற நில உரிமைக்கான வர்க்கப் போராட்டங்கள் -என்று விடுதலை இயக்கத்தின் அனைத்து நீரோட்டங்களிலும் பெண்கள் பங்கேற்றனர். தலைமறைவு வானொலி நிலையத்தை உஷா மேத்தா என்ற பெண்மணி வெற்றிகரமாக நடத்தினார்.
சுதந்திரக் கொடியின் ஆரம்ப வடிவத்தை உருவாக்கியவர் மேடம் காமா என்ற பெண்மணி. இந்தப் பின்னணியில், விடுதலைப் பெற்ற பின், அரசியலைத் தீர்மானிக்கும் இடங்களில் பெண்கள் இயல்பாகவே பங்கு பெறுவர் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. சுதந்திரம் அடைந்து 28 ஆண்டுகளுக்குப் பின் பெண்களின் அந்தஸ்து குறித்த கமிஷன் ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டு 1975இல் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப் பட்ட பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கை பலவீனமாக இருந்தது இதில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால் ஒதுக்கீடு என்ற பரிந்துரை அளிப்பதில் தயக்கம் இருந்தது. 1981இல் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா.வின் உலக பெண்கள் மாநாடு, சர்வதேச அளவில் அந்தந்த நாட்டு மக்கள் பிரதிநிதிகளில் பெண்களுக்கான இடங்கள் அதிகரிக்க திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. பாகிஸ்தான் போன்ற நாடுகள் நியமன முறையை மேற்கொண்டன. இதர பல நாடுகளின் அனுபவம், ஒதுக்கீடு அல்லது கோட்டா என்ற அடிப்படையிலேயே பெண்களின் எண்ணிக்கை உயர்வதை சாத்தியமாக்கியது.
பெண்கள் அவர்களின் தகுதி, திறமையின் அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று வர வேண்டும் என்ற நிலைபாடு ஒரு புறமும், ஆணாதிக்கமயச் சூழலில் ஒதுக்கீட்டின் மூலமே அவர்கள் வர முடியும் என்ற நிலைபாடு மறுபுறமும் -என குறிப்பிட்ட காலம் பெண்கள் இயக்கங்களின் மத்தியிலேயே விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக ஒதுக்கீடு என்பது ஏற்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு முன் அது வலுவான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றைய வரைவுச் சட்டம் உருவானது வரை அவ்வளவு சுலபமாக நிகழ்ந்து விடவில்லை. ஏராளமான முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
மாற்று ஆலோசனைகளும் சீர்குலைவுச் செயல்களும்
துவக்கத்தில் நியமன முறை மூலம் பெண்களைக் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை நம் நாட்டிலும் எழுந்தது. ஜனநாயக மாதர் சங்கம் அதை முற்றாக நிராகரித்தது. தொகுதிகளில் 33 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பெண்கள் இயக்கங்களின் ஆலோசனை முன்னெழுந்தது. இதற்கு மாற்றாக இதர பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் 33 சதவீத பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறின.
இது ஒரே தொகுதியில் ஒரு கட்சி ஆணையும், ஒரு கட்சி பெண்ணையும் வேட்பாளராக்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும், வெற்றி பெறுவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், கண்டிப்பாக பெண் வெற்றியடைவார் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. அடுத்து, இரட்டை உறுப்பினர் என்ற யோசனை வந்தது. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற ஆலோசனை! இது பெண்களின் திறமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.
அடுத்து, காய்கறி வியாபாரம் போல், எதற்காக 33சதவீதம், ஒரு 10 அல்லது 15 சதவீதம் வைத்துக் கொள்ளுங்களேன் என பேரம் பேசப்பட்டது. 33 சதவீதம் என்ற எண்ணிக்கை சமூகவியலாளர்களின் வலுவான ஆய்வுக்குப் பின் அறிவியல்ரீதியாக எட்டப்பட்ட எண்ணிக்கை. மூன்றில் ஒரு பங்கு என்பது தீர்மானகரமான குரலாக ஒலிக்கும் என்ற அடிப்படையில் அதற்கு பதில் அளிக்கப்பட்டது. தொகுதிகளில் இட ஒதுக்கீடு செய்தால், அனைத்துக் கட்சிகளும் பெண் வேட்பாளரைத் தான் நிறுத்த முடியும், எந்த கட்சி வென்றாலும் ஒரு பெண்ணே அத்தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்படுவார், நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருப்பார்கள், எனவே இது தான் சட்டமாக வேண்டும் என்பது அனைத்துக்குமான பதிலாக தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது.
இடதுசாரி இயக்கம் இக்கோரிக்கையில் வலுவாக நின்றது.அடுத்து, ஒதுக்கீடு என்ற பெயரில் குட்டை முடியும், லிப்ஸ்டிக்கும் அணிந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள் தான் தேர்வு செய்யப் படுவார்கள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சமஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் இதில் இறங்கினர். 1996இல் தேவகவுடா ஆட்சியில் மசோதா, தாக்கல் செய்யப்பட்ட போது, நாடாளுமன்ற விவாதத்தில் ரகளை செய்தனர். மசோதாவைக் கிழித்து எறிந்தனர். இச்சட்டம் வராமல் தடுக்க வேண்டும் என்ற ஆணாதிக்க நோக்கமே இதில் பிரதிபலித்தது. நடை, உடை, பாவனை என்பது பிரச்சனையல்ல; அப்படியே பார்த்தாலும், கட்சிகள் தானே வேட்பாளரைத் தேர்வு செய்கின்றன; இதற்கும் ஒதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று அவர்களுக்கு பதிலடி தரப்பட்டது.
ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு
ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடு என்பது ஒரு வலுவான மாற்றாக முன்வைக்கப்பட்டது. பெண்களுக்கு ஒதுக்கீடு என்று பொதுவாக இருந்தால் முற்பட்ட வகுப்பினரே இடம் பிடிப்பார்கள். எனவே, பிற்பட்ட வகுப்புக்கும், தலித் பழங்குடியினருக்கும் இந்த ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனை நீண்ட காலம் விவாதப் பொருளாக மாறியது. ஏற்கெனவே உள்ள தலித் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டுக்குள் மூன்றில் ஒரு பங்கு அப்பிரிவைச் சார்ந்த பெண்களுக்குக் கிடைக்கும் என்ற விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு, அப்படியானால் ஓபிசி (இதர பிற்பட்ட பிரிவினர்) பிரிவு பெண்களுக்கு இதை எப்படிப் பொருத்துவது, அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்பது தொடர்ச்சியான பிரச்சனையாக எழுந்தது.
தலித், பழங்குடியினருக்கு பொதுவான ஒதுக்கீடு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே இருப்பது போல, ஓபிசிக்கும் தேவை என்ற கோரிக்கை ஏன் எழவில்லை என்று பார்ப்பது மிக முக்கியமானதாகும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சமூக பின்புலத்தைக் கவனித்தால், கணிசமானவர்கள் ஓபிசி பிரிவுக்குள்ளிருந்து வந்தவர்களாகத் தான் இருந்தார்கள். எனவே தான் ஓபிசிக்கான பொது ஒதுக்கீடு வேண்டும் என்ற குரல் எழவில்லை. அதற்கான தேவை இல்லை. பொது ஒதுக்கீடு இல்லாத போது, பெண்களுக்கான ஒதுக்கீட்டில் மட்டும் இதைக் கொண்டு வருவதில் சிக்கல் எழும். அது மட்டுமல்ல, முதலாளித்துவ கட்சிகளில் ஓபிசியினர் வலுவாக இருக்கும் போது, அப்பிரிவுகளைச் சார்ந்த பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்படுவார்கள் என்பது யதார்த்தம்.
சுதர்சனம் நாச்சியப்பன் கமிஷன்
இருப்பினும் ஐமுகூ ஆட்சி காலத்தில், பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் குறித்து சுதர்சன நாச்சியப்பன் அவர்களது தலைமையில் பிருந்தா கராத் உள்ளிட்டவர்கள் இடம் பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் வருகை தந்தது. தமிழகத்துக்கான பல்லாண்டு விவரங்களை எடுத்துப் பார்க்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களில் அநேகமாக பிற்பட்ட வகுப்பினர் தான் பெரும்பான்மையினராக இருந்தார்கள் என்பது தெரிய வந்தது.
சென்னைக்கு வந்த கமிஷன் முன், இவ்விவரங்களை முன்வைத்து, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் 33 சதவீத ஒதுக்கீடு சட்டமாக வேண்டும் என்ற வாதத்தை வலுவாகக் கட்டமைத்தோம். பிறகு அதுவே கமிஷனின் பரிந்துரையாக மாறியது. பிறகு நீண்ட நாள் அப்பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. கட்சிகளின் மத்தியில் கருத்தொற்றுமையை உருவாக்குகிறோம் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஐமுகூ அரசை ஆதரிக்கிற கட்சிகள் இதில் மாற்றுக் கருத்து வைத்திருந்தபடியாலும், ஆணாதிக்கப் பார்வையாலும் அரசியல் உறுதியுடன் ஐமுகூ நடந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், எந்தெந்த கட்சி எதிர்த்து வாக்களிக்கிறது என்று மக்கள் பார்க்கட்டும் என்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பில் கூறப்பட்டது.
முதலில் சட்டம் வரட்டும்...
இடதுசாரிகள் தொடர்ச்சியான அழுத்தத்தைக் கொடுத்ததன் காரணமாகவே குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் இந்த வாக்குறுதி இடம் பெற்றிருந்தது. திமுகவும் இதனை ஆதரித்தது. பாஜக கழுவுகிற நீரில் நழுவுகிற மீனாகவே உலா வந்தது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம், ஆனால் தொகுதிகளில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்பது தான் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. தொடர்ந்து ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் இயக்கங்களின் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டே இருந்தன. முதலில் சட்டம் வரட்டும், அதில் ஏதும் பிரச்சனைகள் இருந்தால் திருத்தங்கள் கொண்டு வரலாம் என்று பெண்கள் இயக்கங்கள் கூறின. பிறகு 2010இல் 108வது அரசியல் சட்டத் திருத்தமாக மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவைக்கு வரவே இல்லை. 7 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
மோடி அரசு துரோகம்
தற்போதைய ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. கருத்தொற்றுமை என்ற சால்ஜாப்பு தேவையில்லை . ஆனாலும், சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இத்தனைக்கும் மோடி ஆட்சிக்கு வந்த உடன், குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டபோது, இந்த அரசு இச்சட்டத்தைக் கொண்டு வரும் என்றே கூறினார். ஆனாலும் செய்யவில்லை. இந்த துரோகத்தைக் கண்டித்து, நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற அழுத்தத்தைக் கொடுக்கவே இந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் திட்டமிடப்பட்டிருக்கிறது. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சர்வரோக நிவாரணி அல்ல என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆனாலும், சமூகத்தின் சரிபாதி, வாக்காளர்களிலும் கிட்டத்தட்ட பாதி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்றால் ஜனநாயகம் அதன் உள்ளார்ந்த பொருளை இழந்து நிற்கிறது என்பதே நிலை. எனவே தான் இக்கோரிக்கை நிறைவேறக் குரல் கொடுக்கிறோம்.
மத்திய- மாநில அரசின் கொள்கைகள்
அரசுகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும், நடவடிக்கைகளும் ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போது, பெண்களும் குடிமக்கள் என்ற முறையிலும், உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையிலும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவு அதிகரித்து வருகிறது. பொது பாதிப்புகளுடன் பெண்கள் சந்திக்கும் பிரத்தியேக பாதிப்புகளையும் முன்வைத்துப் போராட வேண்டும். பெண் சமத்துவத்தைத் தன் திட்டத்தின் ஓர் அம்சமாக முன்வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருக்கிறது, பெண்களின் பாதுகாப்பு, கல்வி வேலைவாய்ப்புக்கும், 33 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமாக்கவும் ஜூலை 15இல் களம் காண்போம் தோழர்களே!

திங்கள், 10 ஜூலை, 2017

ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு சிவகாசியில் பல்லாயிரம் தீப்பெட்டி - பட்டாசு தொழிலாளர்கள் பேரணி


ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு சிவகாசியில் பல்லாயிரம் தீப்பெட்டி - பட்டாசு தொழிலாளர்கள் பேரணி



தீக்கதிர் செய்தி 
சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர் போராட்டத்தில் உ.வாசுகி உரையாற்றினார்.
சிவகாசி, ஜூலை10-
பட்டாசு உற்பத்திக்கு ஜிஎஸ்டியில் மத்திய அரசு 28 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனைக் கண்டித்தும், ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைத்திடக் கோரியும் சிஐடியு-தீப் பெட்டி பட்டாசுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிவகாசியில் திங்களன்று மாபெரும் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தை யொட்டி சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 800க்கும் மேற் பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. இந்த அணிகளில் பணியாற்றும் பல்லாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பேரணி, இரட்டைப் பாலத்திலிருந்து துவங்கி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
டி.கே.ரங்கராஜன்கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டச் பொதுச்செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மண்டல துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந் துள்ள ஜி.எஸ்.டி வரியால், தமிழகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தீப்பெட்டி, பட்டாசு, கைத்தறி, விசைத்தறி ஆகிய தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
அதில் பணிபுரிந்து வரும் ஒரு கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறு தொழில்களை நாட்டிலிருந்து அப்புறப்படுத்தக் கூடிய வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. இந்தியன் டூபாக்கோ கம்பெனி தீப்பெட்டி, அகர்பத்தி ஆகிய பொருட்களை தயாரித்து வருகிறது. இதேபோல் ஒவ் வொரு தொழிலையும், பன் னாட்டு கம்பெனியுடன் இணைக்கும் வேலை தான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. இதனால், நமது குழந்தைகளின் எதிர்காலம், கல்வி, சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்படும். ஏற்கனவே, 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாதுஎன்ற அறிவிப்பால், ஏராளமானசிறு குறு மற்றும் குடிசைத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள் ளன. வரும் ஜூலை 17 இல் நாடாளுமன்றம் கூட உள்ளது. அப்போது, ஜி.எஸ்.டி வரியால், பட்டாசுத் தொழிலின் பாதிப்பு பற்றி இதர கட்சிகளின் எம்.பி.க்களையும் இணைத்துக் கொண்டுஅவசியம் கோரிக்கை எழுப்புவோம். ஜி.எஸ்.டி என்பது பொருளாதார நடவடிக்கை அல்ல. இது ஒருஅரசியல் நடவடிக்கை. அம் பானி, அதானி, ஐ.டி.சி போன்றநிறுவனங்களுக்கு சேவை செய்வது தான் மத்திய அரசின் வேலையாக உள்ளது. உலக வங்கியும்,பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், லாபம் பார்ப்பதற்கும் எந்த தடையும் இருக்கக் கூடாதுஎன தொடர்ந்து கூறி வருகின் றன.
இதை பிஜேபி கொள்கை அளவில் ஏற்றுள்ளது. எனவே, அதை அமல்படுத்துகிறது. எனவே தான் இது அரசியல் நடவடிக்கை எனக் கூற வேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிமெண்ட், தங்கம் ஆகியவற்றின் வரி குறைந்துள்ளது. ஆனால் கைத்தறி, கடலை மிட்டாய் போன்றவற்றின் விலை கூடியுள்ளது. மக்களை ஓட்டாண்டி ஆக்குவது தான் இத்திட்டம். அரிசியாக இருக்கும் போது வரி கிடையாது. ஆனால், அது இட்லியாக மாறும் போது வரிஉண்டு. ஹோட்டலில் சாப்பிட்டால் 18 சதவீத வரி. பஞ்சுக்கு வரி இல்லை. ஆனால் அது துணியாக, நூலாக, சட்டையாகவும், அதில் பட்டன் வைத்தாலும், பின்பு, அந்தச் சட்டைக்கு கம் பெனி பெயர் வைத்தாலும் வரி தான். இது தான் ஜி.எஸ்.டி.பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தொழிலாளர்களுடன் இணைந்து தொடர் போராட் டங்கள் நடத்தினால், நிச்சயம் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.