தீக்கதிர் செய்தி
உ.வாசுகி
குற்றச்சாட்டு
நாகர்கோவில், ஆக.13-
உத்தரப்பிரதேச அரசு மருத்து வமனையில் 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிர்ப்பலி ஆகும் வரை அம்மாநில முதல்வர் யோகிஆதித்யநாத் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக உ.வாசுகி குற்றம்சாட்டினார்.நாகர்கோவிலில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் அதிக விலை வழங்குவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்களித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் விவசாய விரோத கொள்கையையே அமல் படுத்தி வருகின்றனர்.
கேஸ் மானியம் ரத்து செய்யப்படும் என அறிவித்த மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எதிர்ப்பு வந்த பிறகு கேஸ் மானிய ரத்து அறிவிப்பிலிருந்து பின் வாங்கி னார். தற்போது இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றாலும் அவர்கள் பின்பற்றும் நவீன தாராளமய கொள்கையின் ஒருபகுதியே மானியவெட்டு. எனவே இது மக்கள் தலையில் தொங்கும் கத்தியாக உள்ளது.50 சதவீதம் பேருக்குத்தான் ரேசன் வழங்கமுடியும் என்ற மத்திய அரசின் முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. உணவுபாதுகாப்பு சட்டத்தின்படி ஒருகுடும்பத்தின் ஆண்டு வருமானம்1 லட்சம் ரூபாய் இருந்தால் ரேசன்பொருட்கள் வழங்கப்படாது எனக்கூ றுவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் என்றால்மாதத்திற்கு 8333 ரூபாய்.
இதனால்ஒரு குடும்பத்தில் 3 பேர் முறை சாரா தொழிலில் ஈடுபட்டு ஒவ்வொருவரும் மாதம் 3000 ரூபாய் சம்பா தித்தால் கூட உணவு மானியம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கார்ப்பரேட்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பல்லாயிரம் கோடி ரூபாய் மானியமாக மத்திய அரசு வாரி வழங்கும் போது சாதாரண ஏழை மக்களுக்கான மானியத்தை ரத்து செய்வது எந்த விதத்தில் சரியானது?மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது கட்சியை, இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கப் பட்டாலோ, கொல்லப்பட்டாலோ தமிழகம் கலவர பூமியாக மாறும் என கலவரத்தை தூண்டும் வகையில், பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். இந்த பேச்சு பொறுப்பான பதவியில் இருக்கும் மத்தியஅமைச்சருக்கு அழகல்ல.மாநிலத்தில் கலவரத்தை ஏற் படுத்தும் நோக்கில் பேசிய மத்திய அமைச்சரை கண்டிக்காத தமிழக அரசு மக்களுக்காக போராடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்துகிறது.
துண்டுப் பிரசுரம் வழங்குவதும், மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டிய குற்றமா? இந்தியா ஒரு ஜனநாயக நாடா என்கிற கேள்வி தான் மக்கள் மத்தியில் எழுகிறது.கும்பகோணம் தீவிபத்தில் 94குழந்தைகள் பலியான வழக்கில்குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆகஸ்ட் 7 ந்தேதி முதல் 11 ந்தேதி வரை 63 குழந்தைகள் இறந்துள்ளன. ஆனால் 5 தினங்களாக 63 குழந்தை கள் பலியாகும் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உண்மையை மூடி மறைக்காமல், யார் தவறு செய்தார்கள் என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய வன்கொடுமைகள், சாதி ஆணவ கொலைகளை தடுக்க அரசு, வன்கொடுமை தடுப்பு சட்டம்இயற்றி அமல்படுத்த வேண்டும். மதுரையில் சாதி மறுத்து திருமணம் செய்ததற்காக பெற்றோரால் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் விமலா தேவிக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கின் முதல்கட்ட தீர்ப்பில்,சாதி மறுத்து திருமணம் செய்யும் இளம்தம்பதிகளை சாதி ஆணவ கொலையிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கொண்ட சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்என உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தற்போது மதுரைமாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டுள்ள இந்த திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும். மேலும் சாதி ஒழிப்புக்காக, சாதி ஆணவ கொலைகளுக்கு எதிராக அரசு சீர்திருத்த பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும். நாடு முழுவதும் பெண்களு க்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்களுக்கு எதிரானவன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள், வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரி த்து வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க,பெண்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.