அனைத்து மதுபான கடைகளையும் இழுத்து மூடிட
மாதர் சங்க கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்கோவை, ஆக. 10 -
மாதர் சங்க கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்கோவை, ஆக. 10 -
தமிழக மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் அனைத்து மதுபான கடைகளையும் இழுத்து மூடிட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட 15 வது மாநாடு வலியுறுத்தியுள்ளது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 ஆவது கோவை மாவட்ட மாநாடு துடியலூர் கலைமணி நினைவரங்கில் வியாழனன்று பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. மாவட்ட தலைவர் எஸ்.அமுதா மற்றும் டி.விஜியா, பி.மோகனசுந்தரி தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவர் எஸ்.சாமூண்டீஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். மாநாட்டுஅறிக்கையை மாவட்ட செயலாளர் எ.ராதிகாவும் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜோதிமணியும் முன்வைத்தனர்.
முன்னதாக மாநாட்டை வாழ்த்தி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் நிர்வாகி தீபக்சந்திரகாந்த் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் மாதர்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் மகளிர் பிரச்சனை குறித்து வரும் பெண்களை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யும், மகளிர் காவல்நிலையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும். மாதர்சங்கத்தினர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.
பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாதுகாப்பாக குழந்தைகளுக்கு பால் புகட்டும் வகையில் பாலூட்டும் மையங்கள் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவராக அமுதா, செயலாளராக ராதிகா, பொருளாளராக ஜோதிமணி, துணைத்தலைவர்களாக ராஜலட்சுமி, பங்கஜவல்லி, சாமுண்டீஸ்வரி, துணைச்செயலாளர்களாக டி.விஜயா, ஆர்.சாந்தா, விஜயலட்சுமி மற்றும் 25 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக